Facebook Pixel Få digital tilgang til problemet med DINACHEITHI - NAGAI - November 06, 2025 | Magzter.com

Prøve GULL - Gratis

DINACHEITHI - NAGAI - November 06, 2025

filled-star

Click here to filter issues by date range


DINACHEITHI - NAGAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - NAGAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

I dette nummeret

November 06, 2025

அரியானாவில் மக்களின் தீர்ப்பை திருடிய பாஜக - மு.க.ஸ்டாலின் தாக்கு

வாக்கு திருட்டு தொடர்பாக புதிய தகவல்களை நேற்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்து இருந்தார். அதன்படி டெல்லியில், உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த வாக்கு திருட்டு மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றது. காங்கிரசின் வெற்றியை பாஜகவின் வெற்றியாக மாற்றம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. அரியானாவில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டு இருக்கிறது. 5.21 லட்சம் ஓட்டுகள் போலி. 93,174 ஓட்டுகள் போலியான முகவரிகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த மால் அரியானாவில் ஓட்டு போட்டுள்ளார். அவரது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது. வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது என்றார். இந்தநிலையில், அரியானாவில் வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட சான்றுகள் அதிர்ச்சி அளிக்கிறது என்று முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் ஐயம் எழுகிறது.

1 mins

பீகார் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

1 mins

Nylige utgaver

Relaterte titler

Populære kategorier