தான் உண்டு தன்னோட வாழ்க்கை உண்டு என்று இருக்கும் மக்கள் மத்தியில் தன்னை ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுத்த மக்களுக்காக தன்னால் முடிந்த உதவியினை செய்து வருகிறார் புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன். திருவாரூரில் அமைந்துள்ளது புதுக்குடி கிராமம். இங்குள்ள மக்களின் ஏழ்மை நிலையை கண்டு அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தன் சொந்த செலவில் கட்டுவது மட்டுமில்லாது, அவர்களின் குழந்தைகளின் படிப்பிற்கு தங்களால் முடிந்த உதவிகளை தன் கணவருடன் இணைந்து செய்து வருகிறார்.
"என்னதான் அரசியல் குடும்பத்திலிருந்து நான் வந்தாலும், எனக்கும் அரசியல் புதுசாகத் தான் இருந்தது. உள்ளே வந்த பிறகு அரசியல் பற்றி கத்துக்கவே ஒரு வருடம் தேவைப்பட்டது” என பேச ஆரம்பித்தார் திவ்யா கணேசன்.
"என் அப்பா எங்க கிராமத்தின் ஊராட்சித் தலைவராக இருந்தார். அவர் கிராம மக்களுக்கு செய்யும் சேவையை பார்த்துதான் நான் வளர்ந்தேன். அதனால் எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது. அவரிடம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆனால் என்னுடைய மனதில் எதிர்காலத்தில் அப்பா வைப் போல் நானும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பொறியியல் பட்டப் படிப்பு முடிச்சிட்டு சென்னையில் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தேன். வீட்டில் திருமணம் பேச்சு வந்ததும், வேலையை ராஜினாமா செய்திட்டு கிராமத்துக்கே வந்துட்டேன். அந்த சமயத்தில்தான், ஊராட்சித் தலைவர் தேர்தலில் பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டது. அதில் எங்களுடைய புதுக்குடி ஊராட்சியும் ஒன்று. அப்பாவிற்கு பதில் நாம ஏன் இந்த தேர்தலில் நிற்கக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. என் விருப்பத்தை அப்பாவிடம் தெரிவித்தேன். அவரும் ஆதரவு தர ஊராட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன். எனக்கு மக்கள் கொடுத்த ஆதரவில் எங்க கிராமத்தின் ஊராட்சித் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டேன். 2019ல் இந்த பதவியை ஏற்று இன்று வரை என்னுடைய பயணம் தொடர்ந்து வருகிறது.
この記事は Thozhi の 16-29, Feb 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Thozhi の 16-29, Feb 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.