試す 金 - 無料
"ஸங்கல்ப ஸித்த சாயி”
Aanmigam Palan
|October 01, 2024
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
அது மன அமைதி, தூய்மை ஆகியவற்றைத் தூண்டி, உண்மையான மெய்ப்பொருளின் தன்மையை விளக்கி, புலன்கள் வெளி உலகத்திற்கு வசப்படும் தன்மையை விலக்கி, புதுவேகத்துடன் ஆன்மிகப் படிநிலைகளில் முன்னேறும்படி செய்கிறது.
ஆனால் ஆன்மிக சாதகர்கள் செல்ல வேண்டிய உண்மையான திசைக்குமாறாகச் சென்றால் ஆன்மிக வழியை இழந்தவர்கள் ஆவர். சரியான வழியை அறியாத அறிவு, தவறான வழியின் மயக்கம் இவற்றால் அவர்கள் பாதிப்படைகின்றனர். அவர் களின் வழிகாட்டிகளும் திசைமாறியவர்களாகவே அமைகின்றனர். உலகப் பெருமையை நினைத்து மந்திர சித் தியினால் சில அற்ப சக்திகளைப் பெற்று தன்னை உயர்ந்தோர் என நினைத்துக்கொண்டு 'தமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்குகிறார்கள்'.
"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
என்று 'அபக்குவன்' நிலையை திரு மந்திரம் விளக்கிக் கூறுகிறது. தவம், ஞானம் என்னும் இருவகை நிலைகளி லும் உள்ள போலிவேடம், உண்மை வேடம் என்னும் இவற்றை திருமூலர் 23 திருமந்திரங்களால் விளக்குகிறார். 'அபக்குவன்' ஆன பக்குவம் இல்லாத சிலர் நல்ல குருவை நாடாமல், போலி குருவைக் குருவாகக் கொண்டு பயன் பெறுவதை ஏளனம் செய்கிறார். இங்கு 'குருடு' என்பது அவர்களின் 'அறியாமை' யைக் குறிக்கும்.
அருணகிரிநாதர் காலத்தில், ரச வாதத்தில் அதாவது உலோகங்களைப் பொன்னாகச் செய்வதில் விருப்பமுள் ளவர்கள் நிறைய இருந்துள்ளனர். அந்த ஆசை மக்களின் பேராசையென்றும் அந்த பயனற்ற ஆசையை அறவே ஒழித்து, உண்மைப் பெருநிலையைத் தெரிந்து கொள்வதற்கு உற்ற வழி முருகன் அருளே. அந்த அருளைக் கொடுப்பது திருப்புகழே என மக் களுக்கு அறிவுரை கூறவே, 'சித்து வகுப்பு' பாடுகிறார் அருணகிரிநாதர்.
"அடல் புனைந்த வேலும் மயிலும் என்றும் வாழி
அரிய தொன்று கூற அருகிருந்து கேண்மின்"
"வலிமை வாய்ந்த வேலும் மயிலும்' எஞ்ஞான்றும் வாழ்வதாக! அருமை யான விஷயம் ஒன்று சொல்லப் போகி றேன். அதை என்பக்கத்தே இருந்து கேட்பீர்களாக!” என்று தொடங்கி 119 மூலிகைகள் பற்றிய ஒரு பட்டியலைக் கொடுத்து இந்த மூலிகைகள் மூலம் நீங்கள் பெறும் சித்துக்கள் எல்லாம் பெரிதல்ல. இந்த சித்துக்கள் மூலம் ஜீவ சிவ ஐக்கியத்தை பெறமுடியாது என்றும் எடுத்துக்காட்டுகிறார்.
このストーリーは、Aanmigam Palan の October 01, 2024 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Aanmigam Palan からのその他のストーリー
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size
