ஸ்ரீ குருவாயூரப்பனின் அருமை பெருமைக ளையெல்லாம் மலையாள மொழியில் ஒரு காவியமாகப் படைக்க வேண்டும் என்று விரும்பினார் பட்டத்ரி. அந்தக் காலத்தில் மிகவும் புகழடைந் திருந்தவரும், மகாபண்டிதரும், மலையாள மொழியின் தந்தையுமான 'துஞ்சத்து எழுத் தச்சன்' என்பவர் ஒரு வழிகாட்டினார். 'மச்சம் தொட்டு ஆரம்பிக்கச்சொல்' என்று பரிபாஷையில் ஒரு செய்தி அனுப்பினார்.
அவருக்கு அதன் பொருள் புரிந்துவிட்டது. ஸ்ரீமந் நாராயணனின் மச்சாவதாரத்தில் தொடங்கி,பகவானின் அவதார லீலை களைப் பாடவேண்டும் என்று உத்தரவு வந்துள்ளதை உணர்ந்து, குருவாயூருக்குச் சென்றார். குட்டிக் கிருஷ்ணனின் திருச்சந்ந தியில் அமர்ந்தார் கவிப்பிரவாகம் பெருக் கெடுத்தது. பகவான் வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதத்தின் 18000 - ஸ்லோகங் களும், 1034 - ஸ்லோகங்களாக உருமாறி நூறு தசகங்களாக மலர்ந்தன. இந்த பக்தி நூலை இவர் இயற்றினார் என்பதைவிட, ஸ்ரீகுருவாயூரப்பனே இவர் மூலம் தன் பெரு மைகளைப் பாடிக் கொண்டார் என்பதே பொருந்தும்.
பட்டத்ரி, பக்திப் பெருக்குடன் ஒவ் வோர் அடியையும் இனிமையாகப் பாடப் பாட, அதை ஸ்ரீ குருவாயூரப்பன் அவர் எதிரில் அமர்ந்து கவனமாகக் கேட்டு தலையை அசைத்து ஆமோதித்ததுதான் இந்தக் காவியத்தின் பெருமை. லீலைகள் பல புரிந்த குட்டி கிருஷ்ணனின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூறிவிட்டு, பட்டத்ரி, 'குரு வாயூரப்பா! இப்படித்தானா? கிருஷ்ணா இப்படித்தானா?' என்று சந்தேகத்தோடு கேட்டாராம். 'ஆமாம், சரிதான்' என்று ஸ்ரீகுருவாயூரப்பன் ஆமோதிப்பாராம்.
அதன் பிறகுதான் பட்டத்ரி அடுத்தவரிக்குச் செல்வாராம்.
நரசிம்ம அவதாரத்தைப் பற்றிச் சொல்ல வரும்போது, அவரை எப்படி வர்ணிப்பது என்று பட்டத்ரி யோசித்துக் கொண்டிருந்தா ராம். அப்போது வாதிமாடத்திலுள்ளதூண் ஒன்றிலிருந்து ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி தோன்றி, அங்குமிங்கும் நடந்து காட்டினாராம். கண் ணெதிரே தாம் கண்ட அற்புதக் காட்சியை பட்டத்ரி அப்படியே எழுதிவிட்டாராம்.
இப்படி பூர்ணாவதாரமாகக் கருதப் படும் ஸ்ரீ கிருஷ்ணாவதார லீலைகளை உள்ளம் உரு, மெய்சிலிர்க்க வர்ணித்துள்ளார்
この記事は Aanmigam Palan の 16-29-Feb 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Aanmigam Palan の 16-29-Feb 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.