அனைத்திற்கும் மேலாக, ராட்சசர்கள் கூட அவனைக் கண்டாலே நடுங்கினார்கள். ஒரு சமயம் பெரும் ராட்சசன் ஒருவன் அங்கே ஆசிரமவாசி களுக்குத் தீங்கு செய்ய வந் தான். வந்தவனை மடக்கி,தன் முழங்கால்களாலேயே அடித்துக் கொன்றான் சிறுவன்.
அனைவரும் வியந்தார்கள்.'இவன் எல்லாவற்றையும் அடக்குபவனாக இருப்பதால், இவன் 'சர்வ தமனன்' எனப் பெயர் கொண்டவனாக இருக்கட்டும்'-என்றுஅச்சிறுவனுக்கு சர்வதமனன் எனப் பெயர் சூட்டினார்கள். (இந்த சர்வதமனன் தான் பெரும்புகழ் பெற்ற பரதன். நமக்குத் தெரிந்த பரதன் என்ற பெயரிலேயே பார்க்கலாம் இனி) பரதனுக்குப் பன்னிரண்டு வயதானது. அவனுக்குப் போர்க் கலைகள், யானையேற்றம், குதிரையேற்றம் என, அரசர்க்கு உண் டான அனைத்தையும் சொல்லிக் கொடுத்திருந்தார் கண்வமுனிவர்.
"இதற்குமேல் இவளை இங்கே வைத்திருப்பது சரியல்ல. துஷ்யந்த மன்னனிடம் அனுப்பிவிட வேண்டும்" என்று தீர்மானித்த கண்வமுனிவர், தகுந்த பாதுகாப்போடு சகுந்த லையையும் அவள் பிள்ளை பரதனையும், துஷ்யந்தனிடம் அனுப்பினார் கண்வ முனிவர்.
சகுந்தலைக்கும் பரதனுக்கும் துணையாக வந்தவர்கள், நகரத்திற்குள் நுழைந்ததும் வந்தவழியே திரும்பிவிட்டார்கள். அரசவீதியில் ஓர் அனாதையைப்போலப் பிள்ளையுடன் தனித்து விடப்பட்ட சகுந்தலை, அழுதபடி அரண்மனையை அடைந்தாள்.
அரசவையில் இருந்த மன்னர் துஷ்யந்தனிடம் போய் நின்றாள். அனைவரும் அவளைப் பார்க்க, அவளோ, "மகனே! உன் தந்தையான இந்த அரசருக்கு வந்தனம் செய்!" என்றாள்.
சகுந்தலையின் வார்த்தைகளைக் கேட்டு அனைவரும் திகைத்தார்கள். துஷ்யந்தனோ, விவரங்களை உணர்ந்தாலும் வாய் திறந்து 'பளிச்' சென்று ஏதும் சொல்லமுடியாத நிலையில் இருந்தார்.
この記事は Aanmigam Palan の December 01, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Aanmigam Palan の December 01, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.