試す 金 - 無料
தொடரும் விபரீதங்கள்!
Dinamani Villupuram
|March 12, 2025
ருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு மார்ச் 4-ஆம் தேதி திடீரென பெயர்ந்து விழுந்தது.
-
அப்போது வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்த மாணவர்களில் ஒருவருக்கு தலையில் ரத்தக் காயமும், மேலும் இரு மாணவர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டிருக்கிறது. அதிருஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை.
வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட இந்த வகுப்பறைக் கட்டடம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தில் ஆறு மாதங்களில் பழுது ஏற்பட்டு, மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதற்கு முன்னால், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் (ஜூன், 2022), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியிலும் (ஆகஸ்ட், 2024), ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் (அக்டோபர், 2024) இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இவையெல்லாம் சில உதாரணங்கள்தான். இந்த சம்பவங்கள் எல்லாம் அரசுப் பள்ளிகளில் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நடந்தவுடன் பரபரப்பாகப் பேசப்படுவதோடு, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கண்டனக் குரல்கள் எழுவதும், நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் பதிலளிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. அதனால் இவற்றைக் கடந்து செல்ல முடியவில்லை.
このストーリーは、Dinamani Villupuram の March 12, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Villupuram からのその他のストーリー
Dinamani Villupuram
ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்
கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
1 min
May 18, 2026
Dinamani Villupuram
பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு
பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி
1 mins
May 18, 2026
Dinamani Villupuram
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Villupuram
நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Villupuram
3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
May 18, 2026
Dinamani Villupuram
15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
May 18, 2026
Dinamani Villupuram
கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!
சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Villupuram
புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு
ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Villupuram
எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல
மத்திய கல்வி அமைச்சகம்
1 min
May 18, 2026
Dinamani Villupuram
பிளே ஆஃபுக்கான பந்தயத்தில் நிலைக்கிறது டெல்லி
ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
1 min
May 18, 2026
Translate
Change font size
