試す - 無料

புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடக்கம்

Dinamani Vellore

|

August 15, 2025

புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடங்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மதுரை, ஆக. 14:

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் யாசர் அராபத் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) சங்கர் ஜிவால் தற்போது பணியாற்றி வருகிறார். வருகிற 31-ஆம் தேதியுடன் இவரது பணிக்காலம் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில், தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை. தற்போதைய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதே பொறுப்பில் கால நீட்டிப்பு செய்யப்படலாம் அல்லது யாரேனும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. இது உச்சநீதிமன்றத்தீர்ப்புகளுக்கு எதிரானது. மாநில அரசால் வழங்கப்படும் மூத்த காவல் துறை அதிகாரிகள் (ஐபிஎஸ்) பட்டியலைக் கொண்டு, தமிழக புதிய டிஜிபி வெளிப்படைத்தன்மையுடன் நியமிக்கப்பட வேண்டும்.

வருகிற 2026-இல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களுக்குச் சாதகமானவர்களை பொறுப்பில் வைத்துக் கொள்ள மாநில அரசு விரும்புவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் ஆணவக் கொலை, கொள்ளை போன்ற அச்சமூட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட டிஜிபி பணியிடம் முறையாக நிரப்பப்படுவது அவசியம்.

இதுதொடர்பாக நடவடிக்கை கோரி, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசின் முதன்மைச் செயலர், உள்துறைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

டிஜிபி தேர்வு நியமனம் தொடர்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, தமிழக டிஜிபி பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்கும் செயல்முறையை உடனடியாகத் தொடங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, அவர் பொறுப்பு டிஜிபியாக தொடரவோ, அவரது பணிக்காலத்தை நீட்டிப்பு செய்யவோ கூடாது. இதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரியினார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமர்வு முன் வியாழக்கிழமை முற்பகலில் விசாரணைக்கு வந்தது.

Dinamani Vellore

このストーリーは、Dinamani Vellore の August 15, 2025 版からのものです。

Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。

すでに購読者ですか?

Dinamani Vellore からのその他のストーリー

Dinamani Vellore

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Vellore

இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Vellore

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

time to read

1 min

September 01, 2025

Dinamani Vellore

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Vellore

பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Vellore

அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்

அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Vellore

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது கேரளம்

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகக் கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Vellore

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Vellore

வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு

உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Vellore

பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை

அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size