試す 金 - 無料
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
Dinamani Tiruchy
|June 12, 2026
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
"தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா! அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா!"
மகாகவி பாரதியாரின் வரிகள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த வரிகளை மதிப்பவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள்.
தமிழ்மொழி, பண்பாடு, பாரம்பரியம், இலக்கியச் செழுமை ஆகியவற்றின் மீது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெரு மதிப்பும் அன்பும் கொண்டிருக்கிறார்.
2019- ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஐ.நா. மாநாட்டில் உரையாற்றியபோது, பாரதத்தின் பெருமையாக உலகின் மிக மூத்த மொழி தமிழ் இருப்பதாகவும், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாகப் பார்த்த நாடு பாரதம் என்றும் பெருமிதத்துடன் சங்க இலக்கியத்திலிருந்து கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றின், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' வரிகளை மேற்கோள் காட்டி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
உலகம் முழுவதும் செல்லும் இடங்களில் எல்லாம் பாரதத்தின் பெருமையாகத் தமிழ் மொழியைக் கொண்டாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் பிரதமர், அண்மையில் மலேசியாவில் உரையாற்றிய போதும் தமிழரின் வரலாற்றுப் பக்கங்களை நினைவு கூர்ந்தார்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடலோடிகளாக உலகம் சுற்றி வந்து நாகரிகம் பாராட்டிய மக்கள் இன்றும் உலகின் பல நாடுகளில் பல துறைகளில் சிறந்து விளங்குவது தமிழின் பெருமையை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் குறிப்பிட்டதில் தமிழக வரலாறு, தமிழர் வாழ்வியல் குறித்த பிரதமரின் புரிதலை வெளிப்படுத்தின.
மலேசியாவில் தமிழ் மொழி, கலாசாரத்தை மேலும் வளர்க்கும் நோக்கில், மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழ் இலக்கியம், பண்பாடு மற்றும் திருக்குறள் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்ப இந்த மையம் உறுதுணையாக இருக்கும் என்பதிலும் தமிழரின் ஆயிரம் ஆண்டுகாலப் புகழை எடுத்துச் சொன்னதிலும் தமிழ் நெஞ்சங்கள் நிறைந்து போயின.
திருவள்ளுவர் மையம் அமைப்பது குறித்த விஷயத்தை எழுதும் போதே பிரதமர் திருக்குறள் மற்றும் மகாகவி பாரதி மீது கொண்டுள்ள ஈடுபாடு பல நினைவுகளை அலையலையாய் எழுப்புகின்றன.
このストーリーは、Dinamani Tiruchy の June 12, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tiruchy からのその他のストーリー
Dinamani Tiruchy
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tiruchy
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tiruchy
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Tiruchy
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Tiruchy
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.
1 min
June 12, 2026
Dinamani Tiruchy
காணிக்கையாக சிலைகள்!
அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.
1 mins
June 12, 2026
Dinamani Tiruchy
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Tiruchy
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Tiruchy
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Tiruchy
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Listen
Translate
Change font size

