試す - 無料

ஹசீனாவுக்கு மரண தண்டனை

Dinamani Thoothukudi

|

November 18, 2025

வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, அப்போது பிரதமராகப் பதவி வகித்த ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதிமுதல் போராட்டங்கள் நடைபெற்றன. பெரும்பாலும் மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும் காவல் துறைக்கும் கடுமையான மோதல் சம்பவங்கள் ஏற்பட்டன.

இந்தப் போராட்டங்களால் வன்முறை மூண்ட நிலையில், அங்குள்ள 50 மாவட்டங்களில் 36 நாள்கள் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர்; 25,000 பேர் காயமடைந்தனர்.

மாணவர்களை சமாதானப்படுத்த முடியாமலும், நாட்டில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட முடியாமலும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார்.

பின்னர், அவர் ராணுவ ஹெலிகாப்டரில் வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் இந்தியாவில் எங்குள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை.

இதேபோல அந்நாட்டின் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த அசதுஸ்ஸமான் கான் கமாலும் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக நம்பப்படுகிறது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார்.

453 பக்க தீர்ப்பு:

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டு வந்தது. பல மாதங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி குலாம் முர்தாசா மஜூம்தார் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு திங்கள்கிழமை (நவ.17) தீர்ப்பளித்தது.

Dinamani Thoothukudi からのその他のストーリー

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்

தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.

time to read

1 mins

December 04, 2025

Dinamani Thoothukudi

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

time to read

1 min

December 04, 2025

Dinamani Thoothukudi

மார்க்ரம் அபாரம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

எடப்பாடி பழனிசாமியுடன் பாமக நிர்வாகிகள் சந்திப்பு

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியுடன், பாமக செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் கே. பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

time to read

1 min

December 04, 2025

Dinamani Thoothukudi

தமிழகத்தில் நிலவும் அரசியல் காரணங்களால் ஹிந்தி கற்க முடியவில்லை: எல்.முருகன்

தமிழகத்தில் நிலவும் அரசியல் காரணங்களால் தன்னால் ஹிந்தி கற்க முடியவில்லை என்று மத்திய தகவல் - ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

time to read

1 min

December 04, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Thoothukudi

16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Thoothukudi

சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Thoothukudi

தங்கம் பவுன் ரூ.160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Thoothukudi

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை

தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

December 04, 2025

Listen

Translate

Share

-
+

Change font size