試す - 無料

மனிதம் சொல்லும் மரபு

Dinamani Thoothukudi

|

July 07, 2025

எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உதவுகிறார்கள்; நட்பெனும் நந்தவனத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து கொண்டவர்கள். ஒரு சிறு உதவி கூட ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும்; வாட்டத்தைப் போக்கும்; பட்ட மரம் துளிர்ப்பதுபோல் நம்பிக்கை துளிர்விடும்.

- வெ.இன்சுவை

வாழ்க்கை என்றால் மேடு, பள்ளங்கள் இருக்கும்; ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதுபோல நல்லவர்களும், தீயவர்களும் சேர்ந்ததுதான் இந்த உலகம். மனிதர்களில் எல்லோருமே புத்தர்களாக, உத்தமர்களாக, நீதிவான்களாக, தர்மசிந்தனை உடையவர்களாக, அறவழியில் நடப்பவர்களாக, சத்தியத்தைத் தாங்கிப்பிடிப்பவர்களாக, சமுதாய அக்கறை கொண்டவர்களாக இருப்பதில்லை.

தராசுத் தட்டுக்களைப் போல சமமாக இருக்க முடியாது. சமூக ஊடகச் செய்திகளைப் பார்க்கும்போது, எங்கு பார்த்தாலும் அடாத செயல்கள் நடப்பது போலவும், எல்லோரும் காமக் கொடூரர்களாகவும், ரத்தவெறி பிடித்து அலைபவர்வர்களாகவும் தெரிகிறார்கள். நமக்கும் மனித குலத்தின் மீது இருந்த நம்பிக்கை தளர்ந்து வருகிறது. நம்முடன் பழகும் அனைவரும் ஆதாயத்துக்காகவும், உள்நோக்கத்துடனும்தான் பழகுகிறார்கள் என்று தப்புக் கணக்கு போட்டு விடுகிறோம்.

நாம் ஒருவருடனும் உள்ளன்புடன் பழகாமல் தனித்தனி தீவுகளாக வாழ்கிறோம். நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள். மனசு முழுக்க கருணையையும், அன்பையும் நிரப்பிக் கொண்டு எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். சமுதாய நலனுக்காக, பொருள் நிறைந்தவர்கள் பணத்தையும், அல்லாதவர்கள் உடல் உழைப்பையும் நல்குகிறார்கள். பால் நினைந்தாடும் தாயைப்போல பரிவு காட்டுகிறார்கள்.

எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உற்றுழி உதவுகிறார்கள்; நட்பெனும் நந்தவனத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து கொண்டவர்கள். பெரிய உதவி என்று இல்லை. ஒரு சிறுஉதவி கூட ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும்; வாட்டத்தைப் போக்கும்; பட்ட மரம் துளிர்ப்பது போல் அவர்களின் நம்பிக்கை துளிர்விடும்.

பசுமையைப் பார்த்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி என்பதைப்போல, பலர் செய்யும் நல்ல செயல்களைப் பார்க்கும் போது மனசுக்குள் பன்னீர் தெளித்ததைப்போல இருக்கிறது. இறுகிய பாறை நெகிழ்வது போல இதயம் நெகிழ்கிறது. சட்டென வாழ்வு இனிமையாகிறது.

பிறருக்கு உதவி செய்யும்போது, அதுதரும் ஆனந்தம் எல்லையற்றது. நாம் காட்டும் சின்னச் சின்ன அன்பில் குளிர்ந்து போகின்றன பல உள்ளங்கள். உதவி பெறுபவர்களின் முக மலர்ச்சி நம் வாழ்க்கையில் ஒளி ஏற்றும்.

Dinamani Thoothukudi からのその他のストーリー

Dinamani Thoothukudi

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்

முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Thoothukudi

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

ஒரு பாதை ரயிலில் தப்பிய தாய், மகள் மறுபாதை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

ஓமலூர் அருகே ரயில் என்ஜின் மோதியதில் தாய், மகள் திங்கள்கிழமை இறந்தனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

ஜனவரி இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.

time to read

1 min

January 06, 2026

Translate

Share

-
+

Change font size