Facebook Pixel நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு- ஒரு பார்வை! | Dinamani Thanjavur - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு- ஒரு பார்வை!

Dinamani Thanjavur

|

March 13, 2025

குழந்தைகள் பெறும் விகிதம் குறைவதால், மக்கள் தொகை குறைந்திருக்கும் நிலையில் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுவது, தென்னிந்திய மாநில மக்களைத் தண்டிக்கக் கூடிய வகையில், மக்கள்தொகையில் நீதியை நிலைநாட்டி முன்னேற்றப் பாதையில் சென்ற தென்மாநிலங்களுக்கு அநீதியை இழைக்கின்ற செயலாகும்.

- முன்னாள் அமைச்சர்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை மறுவரையறை செய்யப்பட வேண்டும் என இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 82 மற்றும் 170 வலியுறுத்துகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில், இந்தியாவில் மூன்று முறை 1951, 1961, 1971 ஆண்டு நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தது.

மேற்கூறிய கணக்கெடுப்புகளின்படி, இந்தியாவின் மக்கள்தொகை முறையே அன்றைய காலகட்டத்தில் 36 கோடி, 43.9 கோடி மற்றும் 54.8 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 1952-இல் நடந்த முதல் தேர்தலில் 494 தொகுதிகள் அமைக்கப்பட்டன.

அடுத்து நடந்த கணக்கெடுப்புகள் மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இந்த எண்ணிக்கை 522 மற்றும் 543 என உயர்ந்தது. அடுத்து நடைபெற இருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவமும் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆகவேதான், தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அப்படி எந்தப் பிரச்னையும் எழாது என்று பாஜக சொல்கிறது. இந்தித் திணிப்பு, மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழக அரசியல் கட்சியினரும், தமிழக மக்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.

தற்போது இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்ற மறுசீரமைப்பின் மூலமாக மத்திய அரசு, மாநில அரசுகளின் மீதான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. மும்மொழித் திட்டத்தினை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், நிதியைத் தர முடியாது என்று கூறுவது அடக்குமுறை. கூட்டாட்சிக்கு எதிரானது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக இயற்றி அதன் மூலம் பெரும் பயனும் அடைந்திருக்கிறது.

Dinamani Thanjavur からのその他のストーリー

Dinamani Thanjavur

கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே

நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்

time to read

1 min

June 28, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்

தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thanjavur

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thanjavur

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thanjavur

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thanjavur

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Thanjavur

ஜம்மு-காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; நால்வர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் மலைப் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Thanjavur

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 28, 2026

Translate

Share

-
+

Change font size