試す 金 - 無料
இந்தியா ‘வளர்ந்த’ பொருளாதாரம்தான்!
Dinamani Salem
|August 05, 2025
இந்தியப் பொருளாதாரத்தைப் பொருத்தவரை, சர்வதேச அமைப்புகள் தரும் புள்ளிவிவரங்கள் டிரம்ப் கருத்தை மறுக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தை ‘வளரும்’ என்றுகூட கூறாமல் ‘வளர்ந்த’ என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருளாதாரத்தை ‘சரிந்த பொருளாதாரம்’ என்று கூறியுள்ளார். இந்தியாவும், ரஷியாவும், தங்களது சரிந்த பொருளாதாரத்தை இணைந்தே எடுத்துச் செல்லலாம் என்றும் கேலி செய்துள்ளார்.
இந்தியாவின் அதிக வரி விதிப்பையும், வர்த்தகக் கொள்கைகளையும் சுட்டிக் காட்டி, ஆகஸ்ட் 7 முதல் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்தியப் பொருள்கள் மீது 25% கூடுதல் வரி விதித்துள்ளார். மேலும், ரஷிய எண்ணெய் மற்றும் ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கு அபராதம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
அரசியல் கொள்கைகள் எதுவாக இருப்பினும், நாட்டின் இறையாண்மையையும், பொருளாதாரப்பாதுகாப்பும், அந்நிய நாடுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, ஆளும் அரசை ஆதரிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் தார்மிகக் கடமையாகும். ஆனால், டிரம்ப்பின் கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரித்தும், ஆமோதித்தும் வரவேற்றுள்ளார்.
‘அமெரிக்க அதிபர் உண்மையைச் சொல்லி உள்ளார். இந்தியப் பொருளாதாரம் செத்து விட்டது. பிரதமர் மோடி அதைக் கொன்று விட்டார். இது பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர உலகிலுள்ள அனைவருக்கும் தெரியும்’ என்று ஜாடை மாடையாகக்கூட அல்ல; நேரடியாகவே கடுமையாகத் தாக்கி உள்ளார். தனது கருத்தை உறுதிப்படுத்த நான்கு காரணங்களை முன்வைக்கிறார்.
‘மோடி-அதானி கூட்டணி; கௌதம் அதானியின் வர்த்தகங்கள் அனைத்துக்கும் கண்மூடித்தனமான ஆதரவு; பண மதிப்பிழப்பும், குறைபாடுள்ள சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி விதிப்பும்; இத்தகைய கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளன.
このストーリーは、Dinamani Salem の August 05, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Salem からのその他のストーリー
Dinamani Salem
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Dinamani Salem
அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.
1 min
November 03, 2025
Dinamani Salem
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Salem
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Salem
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Salem
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Salem
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Salem
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Salem
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Salem
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Translate
Change font size
