試す - 無料

பிரசாரக் களமிறங்கும் எடப்பாடி பழனிசாமி!

Dinamani Salem

|

July 07, 2025

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே, எதிர்க்கட்சியாக இருக்கும்போது அமைதி காத்து, கடைசி ஆறு மாதங்களுக்கு முன்பே முனைப்புடன் பிரசாரக் களத்தில் இறங்குவது என்பதுதான் அதிமுகவின் தேர்தல் அணுகுமுறையாக இருந்து வருகிறது.

- வெ.செல்வகுமார்

எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு எதிராகத் தீவிரமாகக் களமிறங்காமல் இருக்கிறார் என்பதுதான் அவர்மீது வைக்கப்படும் மிகப் பெரிய குற்றச்சாட்டு. அதற்கு பதிலளிப்பதுபோல, ஜெயலலிதா பாணியில் தமது பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறார் முன்னாள் முதல்வரும் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.

திமுக தரப்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற கோஷத்துடன் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை இன்று (ஜூலை 7) தொடங்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் சுற்றுப்பயணத்தால் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் அல்லது கொங்கு மண்டலம் எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் வாக்கு வங்கியாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு வரை இந்த வாக்கு வங்கி தக்க வைக்கப்பட்டது. கடந்த 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்தாலும், மேற்கு மண்டலத்தில் அதிமுக, கூட்டணி கட்சிகளில் இருந்து 16 பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Dinamani Salem からのその他のストーリー

Dinamani Salem

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Salem

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Salem

Dinamani Salem

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Salem

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Salem

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Salem

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Salem

Dinamani Salem

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Salem

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Salem

அம்மானை!

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Salem

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size