Facebook Pixel அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்! | Dinamani Namakkal - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்!

Dinamani Namakkal

|

September 05, 2025

உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும் வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு, அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரர்தான்.

- இளங்கோ கட்டிமுத்து

ஆண்டுதோறும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை (செப்டம்பர் 5), அவரது பங்களிப்புகள் மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடுகிறது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். அவர் தத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றவர். இவர் அன்னிபெசன்ட் அம்மையாரின் பேச்சில் கவரப்பட்டதோடு, பேச்சுவன்மை மிகுந்தவராகவும், தன்பேச்சால் அனைவரையும் ஈர்ப்பவராகவும் திகழ்ந்தார்.

தன் முதல் பணியை சென்னை மாநில கல்லூரியில் தொடங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து, நீண்ட காலமாக தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் 'சர்' பட்டத்தை தனதாக்கிக் கொண்டதோடு, இவருக்கு 1954-இல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1952 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய போது, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை, ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாட அனுமதி கோரி அவருடைய மாணவர்கள் அவரை அணுகியபோது, 'எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அது எனது பெருமைக்குரிய பாக்கியமாக இருக்கும்' என்ற கோரிக்கையைப் பரிந்துரை செய்தார். அதன்படி, இந்தியாவில் 1962-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ளவர் குரு. நமக்கு இந்த உலகைக் கற்பிக்கும் ஆசான். நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். பெற்றோர் சொல்வதைவிட ஆசிரியர் சொல்வதைத்தான் மாணவர்கள் கேட்பார்கள். எனவே, ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்.

Dinamani Namakkal からのその他のストーリー

Dinamani Namakkal

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

3,000 ஊழியர்கள் ஈடுபடுவர்

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்

நீட் வினாத்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

time to read

1 mins

May 17, 2026

Dinamani Namakkal

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்

சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

சென்னைக்கு ஏமாற்றம்: பெங்களூருக்கு வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-2 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியிடம் சனிக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

200 போயிங் விமானங்களை வாங்க சீனா ஒப்புதல்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை

தென்கிழக்கு அரபிக் கடல், தென்மேற்கு-தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் ஸ்ரீவிஜயபுரம் உள்பட அந்தமான்-நிகோபார் தீவுப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

ஏப்ரலில் தங்கம் இறக்குமதி 82% அபரிமித வளர்ச்சி!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் போதிலும், இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி வருடாந்திர கணக்கில் 81.69 சதவீத வளர்ச்சியுடன், 562 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Translate

Share

-
+

Change font size