試す 金 - 無料
ஒருமனதாக தீர்மானம் தேவை!
Dinamani Namakkal
|May 20, 2025
பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகளையும், அவர்களது பயிற்சி முகாம்களையும் முற்றிலும் அழித்தொழிக்கும் இலக்குடன் இந்தியா மேற்கொண்ட ‘சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடியும், நமது முப்படைகளின் உயர் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்தார்.
அதோடு, இது விஷயத்தில் நமது முப்படைகளும் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு அவர் அனுமதியும் அளித்தார். இதையடுத்து, நமது ராணுவத்தினர் நீண்ட ஆலோசனைகள், திட்டமிடலுக்குப் பிறகு, அண்மையில் நடத்திய அதிதுல்லியத் தாக்குதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த ராணுவ நடவடிக்கையில் முக்கிய பயங்கரவாதிகள் சிலரும் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தினர் மிகவும் கட்டுக்கோப்பாக பயங்கரவாதிகளின் இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த நடவடிக்கையால் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. ஆனால், பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாக பெரும் ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் பாகிஸ்தான் ராணுவமோ, இந்திய எல்லைப் பகுதிகளில் வசித்து வரும் அப்பாவி மக்களைக் குறிவைத்து ஆளில்லா ட்ரோன்கள், பீரங்கிகள், ஏவுகணைகளைக் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது.
このストーリーは、Dinamani Namakkal の May 20, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Namakkal からのその他のストーリー
Dinamani Namakkal
உலக அமைதிக்கு வழிவகுக்கும் யோகா
யோகா என்பது தனிப்பட்ட ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமல்ல, உலக அமைதிக்கு வழிவகுக்கும் உந்துசக்தியாகவும் பயன்படக் கூடியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 mins
June 22, 2026
Dinamani Namakkal
டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 22, 2026
Dinamani Namakkal
உள்ளகப் பயிற்சி கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி மாணவர்கள்!
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக (இன்டர்ன்ஷிப்) பல மாதங்களாகக் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது.
2 mins
June 22, 2026
Dinamani Namakkal
தனியார் ஆலையில் அமோனியா வாயுக் கசிவு: 2 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு காரணமாக வடமாநில பெண் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்; 62 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 22, 2026
Dinamani Namakkal
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,790 கன அடியாக குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,253 கன அடியாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 1,790 கன அடியாக குறைந்தது.
1 min
June 22, 2026
Dinamani Namakkal
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Dinamani Namakkal
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Namakkal
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Dinamani Namakkal
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 22, 2026
Dinamani Namakkal
அமோனியா வாயுக் கசிவால் உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
June 22, 2026
Translate
Change font size

