試す 金 - 無料
மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!
Dinamani Nagapattinam
|October 01, 2025
அக்டோபர் 2மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?
மகாத்மா காந்தி 1915-இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அதுமுதல் ஓய்வில்லாத தேச ஒற்றுமைப் பணி- தொடர் போராட்டங்கள்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் (1915-1919) அவரது உடல் மெலிந்தது; நலிந்தது. அப்போது, அவர் வசித்த இடம் சபர்மதி ஆசிரமம்; 1919, அக்டோபர் 2-ஆம் தேதி அவரது 50-ஆவது பிறந்த நாள் வந்தது.
அன்று அவரது உடல் நிலை சரியில்லை. மோசமடைந்து வருகிறார்; தொடர்ந்து இருமுகிறார். உடனே வருமாறு அவரது மகன்களுக்கு தந்திகள் அனுப்பப்படுகின்றன. மகன் தேவதாஸ் வந்து தந்தையை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார். மகாத்மா காந்தி எதுவும் பேசவில்லை. ஆசிரமவாசிகளிடம் ஏன் இவ்வளவு பேர் இங்கே வந்தீர்கள்? அவரவர் பணியைச் செய்ய வேண்டாமா? என்றார். எந்நிலையிலும் தன் நலம் கருதாமல், பிறர் துயர் துடைப்பதே இறைப் பணி! இதுதான் அண்ணல் நமக்கு விட்டுச் சென்ற 50-ஆவது பிறந்த நாள் செய்தி!
1931 அக்டோபர் 2-ஆம் நாள். அது மகாத்மா காந்தியின் 62-ஆவது பிறந்த நாள். அப்போது, இரண்டாவது வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக மகாத்மா பிரிட்டன் சென்றிருந்தார். அங்குள்ள காந்திய அன்பர்கள், அவரது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பினர். லண்டன் லைசெஸ்டர் சதுக்கத்தில் உள்ள விக்டரி ஹாலில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தியர்களும் ஐரோப்பியர்களும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
பிறந்த நாள் என்பதற்காக மகாத்மா காந்தி ஓய்வு எடுக்கவில்லை; வழக்கமான பணிகளை மேற்கொண்டார். எப்போதும்போல் வட்ட மேசை மாநாட்டுக்குக் கிளம்பிச் சென்று விட்டார். அங்கோ விவாதங்கள் நீடித்தன. மாநாட்டுப் பணிகள் அவரை மிகவும் களைப்பாக்கியிருந்தன. விழா அரங்குக்கு காந்தி வருவதற்கு, காலதாமதம் ஆகிவிட்டது. அது மகாத்மா காந்திக்கு மிகுந்த கவலையைத் தந்தது.
விழா அரங்கில் அவர் அதிகம் பேசவில்லை. பேச்சைத் தொடங்கி அவர் சொன்ன முதல் வாசகம்,
'தவிர்க்க இயலாத காரணத்தால், நான் இங்கே வருவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. காலதாமதத்துக்கு வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்பதாகும். வந்திருந்த விருந்தினர்கள் அதைக்கேட்டு கண்கலங்கி நின்றனர்!
காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது மகாத்மா காந்தி கற்பித்த, கடைப்பிடித்த நெறிமுறைகளில் ஒன்றாகும்.
このストーリーは、Dinamani Nagapattinam の October 01, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Nagapattinam からのその他のストーリー
Dinamani Nagapattinam
27 கருடசேவை ... 18 நவநீத சேவை!
பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.
1 mins
June 05, 2026
Dinamani Nagapattinam
இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.
1 min
June 05, 2026
Dinamani Nagapattinam
மத்திய அரசு தொடர்பான கருத்து: மம்தா மீது காவல் நிலையத்தில் புகார்
வங்கதேசத்தில் நடக்கும் அரசியல் கொலைகளில் மத்திய அரசை தொடர்புபடுத்தி பேசியதாக குற்றஞ்சாட்டி, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1 min
June 05, 2026
Dinamani Nagapattinam
தகுதியுள்ள நபர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்
தகுதியான நபர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
1 min
June 05, 2026
Dinamani Nagapattinam
ஹைதராபாதில் சூடான் நாட்டவர் தனிமைப்படுத்தப்பட்டார்
எபோலா தொற்று அறிகுறி
1 min
June 05, 2026
Dinamani Nagapattinam
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினர்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கைக்கெட்டாமலேயே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு அந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.
1 min
June 05, 2026
Dinamani Nagapattinam
பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!
நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.
2 mins
June 05, 2026
Dinamani Nagapattinam
உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம்
உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min
June 05, 2026
Dinamani Nagapattinam
பிரிவுகள் நிரந்தரமல்ல...
கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர்.
2 mins
June 05, 2026
Dinamani Nagapattinam
திருப்பெருந்துறையில் திருமஞ்சனப் பெருவிழா!
திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகர் கட்டியதுதான் ஆவுடையார்கோவில் என்றழைக்கப்படும் திருப்பெருந்துறை ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் சுவாமி திருக்கோயில்.
1 mins
June 05, 2026
Translate
Change font size
