Facebook Pixel வணிகப்போர் வளையத்தில் இந்தியா! | Dinamani Madurai - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

வணிகப்போர் வளையத்தில் இந்தியா!

Dinamani Madurai

|

April 17, 2025

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டொனால்டு டிரம்ப், உலகமே தனது ஆளுகைக்கு கீழ் வந்து விட்டதுபோல செயல்படத் தொடங்கிவிட்டார். மற்ற நாடுகளைத் தமது அடிமை நாடுகளைப் போல கருதிக் கொண்டு பேசுவதும், செயல்படுவதும் அவரின் அன்றாடச் செயல்களாகிவிட்டன.

- உதயை மு. வீரையன்

அரசாட்சியாக இருந்தாலும், மக்களாட்சியாக இருந்தாலும் வரி விதிக்காமல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், வரியை அளவோடு விதிக்க வேண்டும். தேன் அடையிலிருந்து தேன் எடுப்பதுபோல மக்களைத் துன்புறுத்தாமல் வரி விதித்து ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் தமிழ்ப்புலவர்கள் மன்னர்களுக்கு அறிவுறுத்தினர்.

வேலொடு நின்றான் இடுஎன்றதுபோலும் கோலொடு நின்றான் இரவு (குறள் 552)

அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருள் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், எல்லாவற்றையும் தா என்று கேட்பதைப் போன்றதாகும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

அரசியல் நெறிவாழ்வார் எவ்வாறு குடிமக்களிடம் வரி கேட்டு வாங்க வேண்டும் என்பதற்கு சங்க இலக்கியத்தில் ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது. காய்ந்து முற்றிய நெல்லை அறுத்து கவளம் கவளமாக யானைக்கு உண்ணக் கொடுத்தால் 'மா' அளவுள்ள சிறிய நிலத்தில் விளைவதும் பல நாளைக்கு உணவாகும். அவ்வாறின்றி, 100 வயல் அளவுள்ள பெரிய நிலமாயினும், யானை தானே வயலுக்குள் புகுந்து உண்டால் வாய்க்குள் போவதை விட அதன் கால்களில் பாழாவதே மிகுதியாகும். இவ்வாறு, காய்நெல் அறுத்து கவளம் கொளினே' என புறநானூற்றுப் பாடலில் கூறப்படுகிறது. மக்கள் நலம் நாடும் அரசுகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஏழை, பாட்டாளி மக்கள் இதனால் மிகப்பெரும் துயரங்களை தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி ஆட்சி செய்வோர் கவலைப்படுவதில்லை. அதிகாரம் செய்யும் கார்ப்பரேட்டுகளும் கவலைப்படுவதில்லை.

பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கின. 1990-களின் பிற்பகுதியில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்ததாகக் கூறப்பட்டது.

எப்போதும் ஆண்டுக்கு இரண்டு சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் இப்போது சராசரியாக 6 முதல் 7 சதவீதம் வரை உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகள், உலகமயமாக்கலால் பயனடைந்த உலக நாடுகளுக்கு ஏமாற்றமாகவும், பின்னடைவாகவும் அமைந்துள்ளன.

Dinamani Madurai からのその他のストーリー

Dinamani Madurai

Dinamani Madurai

எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

பங்குச்சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.38,440 கோடி

மத்திய கிழக்கு போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலையுயர்வு, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியப் பங்குச்சந்தை சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

இந்தியாவுக்கு ரூ.476 கோடி கடனை திருப்பிச் செலுத்தியது மாலத்தீவு

இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கடனில் ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உலகின் எந்த சக்திக்கும் இந்தியா தலைவணங்காது

உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவை தலை வணங்க வைக்கவோ அல்லது நெருக்கடி தந்து பணிய வைக்கவோ முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

time to read

2 mins

May 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள்: விவரம் சேகரிக்கும் கல்வித் துறை

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

முதல்வர் விஜய்க்கு மத்திய அரசு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களைவிட வெற்றி பெற்றதற்கான வாக்கு வித்தியாசம் குறைவு

புதிதாக மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size