試す - 無料

பொறுப்புகளை ஏற்கும் அரசு தேவை

Dinamani Karur

|

June 17, 2025

மக்களுக்கு தரமான வேலைவாய்ப்பு தேவை; இதற்கு ஒரு பொருத்தமான திட்டமிடுதல், நன்கு வரையறுக்கப்பட்ட இலக்குகள், அதற்கான வழிமுறைகள் தேவை. அனைத்தையும் தனது பொறுப்புகளாக ஏற்றுக்கொள்ளும் அரசு தேவை.

- பிஎஸ்எம் ராவ்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2025-26-ஆம் ஆண்டில் 4,187.017 பில்லியன் டாலராக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. இது ஜப்பானின் 4,186.431 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது 586 மில்லியன் டாலர் (ரூ.5,011 கோடி) அதிகமாகும். இது இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாற்றும், ஜப்பானை ஐந்தாவது இடத்திற்கு தள்ளும்.

இப்போதைய நிலையில் அமெரிக்கா (30.5 டிரில்லியன்), சீனா (19.2 டிரில்லியன்), ஜெர்மனி (4.74 டிரில்லியன்) ஆகியவை இந்தியாவைவிட உயர்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன.

நீதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் இந்த சாதனை குறித்துப் பேசியபோது இந்தியர்களுக்கு பெருமையளிப்பதாக இருந்தது.

அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் என்னவென்றால், இந்தியா 2028-ஆம் ஆண்டில் 5.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் மூன்றாவது இடத்துக்கு உயரும்; ஜெர்மனியை முந்திச் செல்லும் என்பதாகும். இந்த முன்கணிப்புகளுக்காக நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்.

அதே நேரத்தில் இந்தியா உலகின் முதன்மையான பொருளாதார நாடாக ஏற்கெனவே உயர்ந்திருக்க வேண்டும் என்பது தான் உண்மை. மூன்றாவது, நான்காவது இடத்துக்கு போட்டியிடும் நாடாக இருந்திருக்கக் கூடாது. இவ்வாறு கூறுவதற்கு காரணம் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையை நாம் கொண்டிருக்கிறோம். மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் உலகின் செல்வத்திலும், வருவாயிலும் இந்தியா 18 சதவீதத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

இப்போது வெளியாகியுள்ள கணிப்புகள் உருவாக்கிய மகிழ்ச்சியிலேயே நிலை கொண்டுவிடாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரமிது. ஏனெனில், உண்மை நிலவரத்தை நேர்மையாக ஒப்புக்கொள்வது நமது சரியான இடத்தை அடைவதற்கான பாதையை வடிவமைப்பதற்கு மிக அவசியம்.

இதற்காக நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் வளர்ச்சி தொடர்பாக நமக்கு கூறப்பட்டுள்ள எண்கள் சரியானதுதானா?; இரண்டாவதாக அவை சரியாக இருந்தால் நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு இந்த வளர்ச்சி நமது நாட்டுக்கு போதுமானதா?; மூன்றாவதாக சமூகநீதியை எட்டுவதற்கு இந்த வளர்ச்சி மட்டும் போதுமானதா? என்பதாகும். இது தவிர நாட்டின் பொருளாதாரம் புதிய உச்சங்களை எட்டும்போது மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு சிறப்பாக மேம்பட்டுள்ளது என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

Dinamani Karur からのその他のストーリー

Dinamani Karur

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Karur

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size