試す 金 - 無料
சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்!
Dinamani Kanyakumari
|November 22, 2025
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நீர்ம மருந்துகள் (சிரப்) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உலக சுகாதார மையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தது. அதன் பின்பும் உலக சுகாதார மையம் உலக நாடுகள் தங்களிடம் இந்த மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.
2022-ஆம் ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானிலும், 2023-ஆம் ஆண்டு கேமரூன் நாட்டிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகளின் மரணங்களும் நீர்ம மருந்துகளில் கண்டறியப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட மாசுகளும் இந்திய மருந்து தயாரிப்பு ஒழுங்குமுறை கண்காணிப்பில் தீவிர குறைபாடு இருப்பதையே காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டைஎத்திலின் கிளைகோலின் நச்சுத்தன்மை விளைவுகள் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாத நிலையில், அதை உட்கொண்டதாகக் கருதப்படும் நோயாளிகளுக்கான நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் சவாலாக உள்ளன. இதனால், சிகிச்சை அளிப்பதிலும் நச்சுக்கான மாற்று மருந்து வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது. அறியாமையையும் அக்கறையின்மையையும் அகற்றி டைஎத்திலின் கிளைகோல் நச்சுத்தன்மை பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் குறித்த விழிப்புணர்வை மருத்துவர்களுக்கு ஏற்படுத்துவது அரசின் கடமை. இதற்கு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பை உடனடியாக வலுப்படுத்துவது அவசியம்.
இந்தியாவின் மருந்துச் சந்தையில் சில நிறுவனங்கள் ஒப்பந்த உற்பத்தி நடைமுறையின் கீழ் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வகையில், மலிவான நச்சுத்தன்மையுள்ள கரப்பான், கரை திரவங்கள், பொதி பொருள்கள் போன்ற மாற்றுகளைப் பயன்படுத்துகின்றன.
このストーリーは、Dinamani Kanyakumari の November 22, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Kanyakumari からのその他のストーリー
Dinamani Kanyakumari
ஹாட்ரிக் வெற்றி: காலிறுதியில் இந்தியா
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் சுவிட்சர்லாந்தை 5-0 என வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி கண்ட இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
1 mins
December 03, 2025
Dinamani Kanyakumari
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
December 03, 2025
Dinamani Kanyakumari
மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு
மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது
1 min
December 03, 2025
Dinamani Kanyakumari
பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்
தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.
1 min
December 03, 2025
Dinamani Kanyakumari
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.
3 mins
December 03, 2025
Dinamani Kanyakumari
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Kanyakumari
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Kanyakumari
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Kanyakumari
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
December 02, 2025
Dinamani Kanyakumari
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Listen
Translate
Change font size
