試す - 無料

சிறப்பு தீவிர திருத்தம் எனும் தேர்தல் பதற்றம்

Dinamani Kanyakumari

|

August 14, 2025

சிறப்பு தீவிர திருத்தம் என்பது குழப்பத்தையும், மோசமான சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படாதவரை குற்றவாளிகள் என்று பிகார் வாக்காளர்கள் கருதப்படுகிறார்கள். இது தவறான முன்னுதாரணமாக மட்டுமல்லாது சட்டத்தின் அடிப்படை விதிகளையும் மீறுகிறது.

- மணீஷ் திவாரி

காரில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு தீவிர திருத்தம் என்பது ஜனநாயகம், சட்டத்தின் அடிப்படையிலான உலகளாவிய வாக்குரிமை முறையை மறுகட்டமைப்பதாகவே அமைகிறது. இந்த இயந்திரத்தனமான வாக்குரிமைப் பறிப்பு, நாட்டின் அதிகார மையம் நேர்மையாக செயல்படுவதாக வேடமிட்டுள்ளதையும், அரசமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுவதையும் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.

இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் அடித்தளம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 326 ஆகும். அது சற்று தெளிவற்றதாகவும், சில கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதாகவும் அமைகிறது. தேர்தல்களில் வாக்களிக்க இந்திய குடிமகனாகவும் 18 வயதுக்கு குறையாதவராகவும் இருக்க வேண்டும். மனநிலை சரியில்லாதவர், குற்ற நடவடிக்கைகள், ஊழல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு உரிய சட்டங்களின்படி தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய உரிமை உண்டு.

இதில் 'வாக்காளராக பதிவு செய்ய உரிமை உண்டு' என்ற சொல், ஒரு தவிர்க்க முடியாத அரசமைப்பு உரிமையை உருவாக்கியுள்ளதுடன், வாக்களிக்கும் தகுதியை மறுக்கும் பொறுப்பை அரசுக்கு அளித்துள்ளது. இந்தப் பொறுப்பு உருவாக்கம் நான்கு மாறாத கொள்கைகளை உறுதிப்படுத்துகிறது. முதலாவதாக, வாக்குரிமை என்பது குடியுரிமையின் இயல்பாகவே அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட தகுதி.

இரண்டாவது வாக்களிப்பதற்கான தகுதியிழப்புகள் குறித்தானது. இதன்படி, அரசமைப்புச் சட்டத்தில் ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டால், குறிப்பிடப்படாத மற்ற விஷயங்கள் விலக்கப்பட வேண்டியவை என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மூன்றாவதாக ஒவ்வொரு தகுதியிழப்புக்கும் நீதித் துறை ஒப்புதல் தேவைப்படுகிறது. நீதிமன்ற அறிவிப்புகளின்படி மன நிலை சரியில்லாதவர், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சட்டப்பேரவையால் தகுதி நீக்கப்பட்டவர் அல்லது அரசின் பிற நிர்வாக அமைப்புகளால் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கவில்லை என்று அறிவிக்கப்படுவது. இவை தவிர, பிற வேறு எந்த அமைப்புகளும், விதிகளும் யாருடைய வாக்குரிமையையும் தகுதிநீக்கம் செய்ய முடியாது.

Dinamani Kanyakumari

このストーリーは、Dinamani Kanyakumari の August 14, 2025 版からのものです。

Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。

すでに購読者ですか?

Dinamani Kanyakumari からのその他のストーリー

Dinamani Kanyakumari

புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா தொடக்கம்

நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்

'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

புன்னைக்காயலில் செப்.6 இல் கவன ஈர்ப்பு போராட்டம்

புன்னைக்காயலில் ஊர் நிர்வாகக் குமிட்டியின் சார்பில் தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி வரும் செப்.6 ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'

மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Kanyakumari

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இருவர், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு

பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size