Facebook Pixel ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை | Dinamani Kanchipuram - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை

Dinamani Kanchipuram

|

August 29, 2025

ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், மற்ற 24 காவலர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பத்தூர், ஆக. 28:

வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா (25). பள்ளிக்கொண்டாவில் தோல் காலணி நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் காணாமல் போனார்.

இதுதொடர்பாக அப்போதைய பள்ளிக்கொண்டா காவல் நிலைய ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் விசாரணை நடத்தினார். மேலும், பவித்ரா மாயமானது சம்பந்தமாக தொழிற்சாலையில் அவருடன் பணிபுரிந்த ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அஹமத் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

15.6.2015 அன்று ஷமீல் அஹமதுவை காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ், அங்குள்ள காவலர் குடியிருப்பு ஒன்றில் அடைத்து வைத்து விசாரித்தார்.

விசாரணையில் இருந்த ஷமீல் அஹமதுவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Dinamani Kanchipuram からのその他のストーリー

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவு

கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

உயர்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

சீர்திருத்தங்கள், தற்சார்பு நடவடிக்கைகள்: மத்திய செயலர்களுடன் பிரதமர் ஆலோசனை

நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்கள் மற்றும் தற்சார்பு நடவடிக்கைகள் ஊக்குவிப்பு ஆகிய இரு அம்சங்களின்கீழ், மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உயர்நிலை ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்

புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்

அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயர்வு

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2026, மார்ச் இறுதியில் ரூ.72.08 லட்சம் கோடியாக (762.8 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Kanchipuram

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size