試す 金 - 無料
தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!
Dinamani Dharmapuri
|August 28, 2025
பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.
கவனம் தற்போது இந்தியாவை நோக்கித் திரும்பி இருக்கிறது. ஒருபுறம் அமெரிக்கா தரும் புதிய வரிகளுக்கான அழுத்தம், மறுபுறம் ரஷ்யாவுடன் இருக்கும் எண்ணெய் வர்த்தகம், மற்றொருபுறம் சீனா உடனான போட்டி.
இந்தச் சூழ்நிலையில் அமெரிக்கா விதித்த 50% கூடுதல் வரிவிதிப்பு அமலுக்கு வருமா, இந்தியா எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது? அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியுமா, ரஷ்யாவுடனான வர்த்தகத்தைத் தொடருமா போன்ற வினாக்களுடன் உலகம் நம்மை உற்று நோக்குகிறது.
அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் ஆக. 27-ஆம் தேதிமுதல் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்? அதற்கு முன்னதாக அமெரிக்காவுடன் சுமுகமான முடிவு எட்டப்படுமா? வினாக்களோடு இந்தியர்களான நாமும் காத்திருக்கிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இந்தியா புதிய வெளியுறவுக் கொள்கையைக் கொண்டு செயல்படுகிறது. ஜவஹர்லால் நேரு காலத்தில் அணிசாரா கொள்கை பின்பற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பன்முகக் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பல கூட்டமைப்புகளிலும் இந்தியா பங்கு பெறுவது என்ற நிலைப்பாடுதான் அதற்குக் காரணம். உண்மையில் இந்தியாவின் கொள்கை பன்முகக் கூட்டணியதானா?
ஐரோப்பா, அமெரிக்க ஆதிக்கத்துக்கு இடம் கொடுத்துவிட்டது. டிரம்ப்பின் முடிவுகளால் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை அடைந்திருக்கிறது. ஆனால், இந்தியா தன்னை எந்த இடத்திலும் இறக்கிக் கொள்ளவில்லை. உலகின் வல்லரசுடன் சம நிலையில் நின்று பேச விரும்புகிறது.
எங்களுக்கான நட்பு நாடுகளை, வர்த்தகக் கூட்டாளிகளை வேறு எவரும் தீர்மானம் செய்ய முடியாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் இன்னும் சில நாள்களில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இந்தியா வந்து வெளியுறவுத் துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்தித்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யப் பயணத்தை மேற்கொண்டார். பிரதமர் சீனா செல்ல இருக்கிறார்.
このストーリーは、Dinamani Dharmapuri の August 28, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Dharmapuri からのその他のストーリー
Dinamani Dharmapuri
ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்
பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்
முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 mins
January 06, 2026
Dinamani Dharmapuri
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு
முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 mins
January 06, 2026
Dinamani Dharmapuri
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
1 min
January 06, 2026
Translate
Change font size
