Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

சமூக நீதிக்கான அடையாளம் ஜாதிவாரி கணக்கெடுப்பு!

Dinamani Dharmapuri

|

May 03, 2025

அடித்தட்டு மக்களின் வாழ்வு உயரத்தைத் தொடுவதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமான ஒன்றாகிறது. அது உணவுப் பொருள்களின் விநியோகத்தில் தொடங்கி, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய ஒன்றாகும்.

- முனைவர் வைகைச்செல்வன்

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முந்தைய அதிமுக அரசு ஓர் அரசாணையை நிறைவேற்றியது. ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியுமா அல்லது மத்திய அரசின் துணை வேண்டுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு இப்போது ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1881-இல் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், ஜாதிவாரியான புள்ளிவிவரத் தரவுகளையும் பிரிட்டிஷ் அரசு எடுத்து வந்தது. இறுதியாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு 1931-இல் நடத்தப்பட்டது. இதன்பின்னர், 1947-இல் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சுதந்திர இந்தியா தன்னைக்குடியரசாக அறிவித்துக் கொண்டதைத் தொடர்ந்து குடிமக்கள் அனைவரும் சமம் என்கிற அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை கைவிட்டது. அதன்பிறகு மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மட்டுமே நடத்துகிறது.

அதில் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் போன்ற தரவுகள் இடம்பெறுகின்றனவே தவிர, பிற்படுத்தப்பட்ட ஜாதியினர், முன்னேறிய வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2009 முதல் 2016 வரையிலான மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2011-ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. அதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அடங்கிய முதல் தரவுக் குறிப்புகள் திரட்டப்பட்டன.

ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பின் முழு விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடுவதற்கு அமைச்சரவையில் ஒருமித்த கருத்து இல்லாததால் வெளியிடப்படவில்லை. அன்றைக்கு அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலை வெளியிடக் கூடாது என்று கருத்து தெரிவித்தவர்களில் முக்கியமானவர்கள். அவர்களது ஆட்சிக் காலம் முடிவடைந்துவிட்டது.

பின்னர், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும், மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையிலும் பாஜக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல்தான் இருந்தது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வலுத்துவந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Dinamani Dharmapuri からのその他のストーリー

Dinamani Dharmapuri

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dharmapuri

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dharmapuri

நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்

விவசாயிகள் கடும் பாதிப்பு

time to read

1 min

December 01, 2025

Dinamani Dharmapuri

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dharmapuri

தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dharmapuri

ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா

பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Translate

Share

-
+

Change font size