試す 金 - 無料
'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...
Dinamani Cuddalore
|June 13, 2026
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.
அதாவது, 'செல்வந்த நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்த காலம் முடிந்துவிட்டது. அமெரிக்காவுக்கு தேவை கூட்டாளிகளே தவிர, பாதுகாப்புக்காக ஒட்டிக்கொண்டிருக்கும் நாடுகள் அல்ல. கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக் கொண்ட கூட்டணிகளையே அமெரிக்கா விரும்புகிறது. ஒருவர் மூலம் பலனடைந்துவிட்டு, அதற்குப் பதிலாக எதையும் திருப்பி அளிக்க மறுப்பதை ஏற்க முடியாது. ஒரு கூட்டணியின் வலிமை என்பது அதில் உள்ள நாடுகளின் எண்ணிக்கையால் அன்றி, படை அமைப்புகளின் எண்ணிக்கையால் அளவிடப்படுகிறது. மாநாடுகளை நடத்துவதைவிட போர் திறனே தேவை' என்று கூறினார்.
இந்தச் சூழலில், ஆக்கஸ் என்றழைக்கப்படும் ஆங்கிலோ-சாக்சன் ராணுவக் கூட்டணி (ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா இடம்பெற்றுள்ள கூட்டணி) 'க்வாட்' கூட்டமைப்பை (இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ள கூட்டமைப்பு) எங்கு கொண்டு சென்று நிறுத்தும் என்பதே தற்போதைய கேள்வி.
கடந்த 1920-ஆம் ஆண்டில் இந்திய, பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பிராந்தியத்துக்கு கார்ல் ஹௌஸோஃபர் என்ற ஜெர்மானிய புவி அரசியல் அறிஞர் முதன்முதலில் புவியியல் வடிவம் அளித்தார். காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகள், ஆங்கிலோ- அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அவரின் பார்வையாக இருந்தது. அவரின் பார்வைக்கும், தற்போதைய 'க்வாட்' கூட்டமைப்புக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. தற்போதைய இந்திய-பசிபிக் கருத்தாக்கத்தை உருவாக்கி பெயரிட்டவர் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே.
கடந்த 2006, செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், இந்திய நாடாளுமன்றத்தில் 'இரு கடல்களின் சங்கமம்' என்ற தலைப்பில் ஷின்ஸோ அபே உரையாற்றினார். அந்த உரையில், 'இந்தியப் பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் ஒன்றோடொன்று இணைந்த ஒரே உத்திசார்ந்த கடற்பரப்பாக கருதப்பட வேண்டும்' என்ற கருத்தை அவர் முன்வைத்தார். அந்தப் பரப்பில் சுதந்திரமும் செழிப்பும் ஒன்றக்கொன்று வலுசேர்க்கும் வகையில் வளரவேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது. இந்தக் கண்ணோட்டமே பின்னாளில் 'க்வாட்' கூட்டமைப்பின் தத்துவ அடித்தளமாகவும், அதைத் தாங்கி நிற்கும் முக்கியச் சிந்தனையாகவும் மாறியது.
このストーリーは、Dinamani Cuddalore の June 13, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Cuddalore からのその他のストーリー
Dinamani Cuddalore
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Cuddalore
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Cuddalore
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Cuddalore
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Cuddalore
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Cuddalore
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Cuddalore
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Dinamani Cuddalore
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Cuddalore
நாயக்கர் கால நெற்களஞ்சியம்
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
2 mins
June 14, 2026
Dinamani Cuddalore
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.
1 min
June 14, 2026
Listen
Translate
Change font size

