Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

உலக சட்டாம்பிள்ளையாக மாற நினைக்கும் அமெரிக்கா...

DINACHEITHI - MADURAI

|

May 30, 2025

ரம்பின் தலைமையில் அமெரிக்கா உலக சட்டாம்பிள்ளையாக மாற முயன்று கொண்டிருக்கிறது. பிற நாடுகளின் வர்த்தகத்திலும் யுத்தத்திலும் தனது மூக்கை நுழைத்து 'பெரியண்ணா' தோரணையில் செயல்படுகிறது.

பாலஸ்தீன இஸ்ரேல் யுத்தம், ரஷ்யா - உக்ரேன் யுத்தம் போன்றவை பிறரால் தூண்டிவிடப்பட்டவையாகவே இருக்கின்றன. கடந்த பிப்ரவரியில் கூட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா காஸா பகுதியை கையகப்படுத்தும் என்றும், எஞ்சியுள்ள கட்டிடங்களை தரைமட்டமாக்கி சமப்படுத்தும் என்றும், பாலஸ்தீன மக்களை இதர நாடுகளுக்கு மாற்றும் என்றும் அறிவித்தார்.

கடந்த காலங்களில் ரஷ்யா, அமெரிக்கா என இருநாடுகள் வல்லரசுகளாக இருந்துகொண்டு பிற நாடுகளின் விவகாரங்களில் பஞ்சாயத்து பேசின. தற்போது அமெரிக்காவும் சீனாவும் வல்லரசு தோற்றத்தில் பிற நாடுகளின் பிரச்சினையில் மூக்கை நுழைக்கின்றன.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி முடிவில்லாமல் நீடித்து வரும் ரஷ்யா - உக்ரேன் போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் நிதியும் ஆயுத உதவியும் அளித்து வருகின்றன. இதில் ஜோ பைடன் தலைமையில் அமெரிக்கா இதுவரை 5.45 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ராணுவ உதவிகளை உக்ரேனுக்கு அளித்துள்ளது. ஆனாலும் அதன் நோக்கம் வியாபாரம் என்பது விரைவிலேயே வெளிப்பட்டது. யுத்தம் முடிவுக்கு வரும் முன்பே செய்த உதவிக்கு பிராயசித்தம் தேட முயன்றது.

உக்ரேன் மண்ணில் அரிய கனிமங்களின் வைப்பு உள்ளது. அவற்றுள் லித்தியம், டைட்டானியம், சிர்கோனியம் மற்றும் கிராஃபைட் போன்றவை நவீன தொழில்துறைக்கு இன்றியமையாதவை. தான் வழங்கிய ஆயுதங்களுக்கு ஈடாக அவற்றை பயன்படுத்திக்கொள்ள உக்ரேன் ஆட்சியாளர்களை அமெரிக்கா நிர்பந்தித்தது. பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு உக்ரைன் நாட்டில் இருக்கும் கனிம வளங்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமும் கையெழுத்தானது.

DINACHEITHI - MADURAI からのその他のストーリー

DINACHEITHI - MADURAI

பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு

\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது: தமிழ்நாட்டில் 97,37,832 பேரின் பெயர்கள் நீக்கம்

ஜன. 18-ந் தேதிக்குள் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

time to read

1 min

December 19, 2025

DINACHEITHI - MADURAI

கொளத்தூர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதிகளாகவே எண்ணுகிறேன்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 min

December 19, 2025

DINACHEITHI - MADURAI

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, புதிய பெயர் : எடப்பாடி பழனிசாமி நிலை என்ன?

மு.க. ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

December 18, 2025

DINACHEITHI - MADURAI

முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை

பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்

time to read

1 min

December 17, 2025

DINACHEITHI - MADURAI

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை டிச 17தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 39 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “தமிழ்நாடு ஹஜ் இல்லம்” கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

time to read

1 min

December 17, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 14, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back