நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள்... "ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது விஜய் சேதுபதியிடமிருந்து போன்... 'யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்புல இளையராஜா சார், யுவன் மியூஸிக்ல நாம ஒரு படம் பண்ணப்போறோம்' என்றபோது திகைப்பின் உச்சிக்கே போய் அது காலம் எனக்குத் தந்த பரிசு என்று அளவிலா மகிழ்வடைந்தேன். ஆனால் அப்படத்தின் தொடக்கத்திற்குப் பின்னர் நான் அடைந்த வேதனைகள்...வேறு யாருக்கும் நடக்கவேண்டாம். அந்த ஆதங்கத்தைத்தான் நான் என் மேடையில் வெளிப்படுத்தினேன். ஆனால் அதுவும் மிகத்தவறாக சித்திரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது' என்று கவலையுடன் சீறுகிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
'2007இல் எனது முதல் படமான நகர்' வெளியானது. அப்படம் 'கூடல் விமர்ச கர்களால் பாராட்டப்பட்டாலும் வசூல் சரியில்லை என்பதால் எனது இரண்டாவது படமான 'தென்மேற்குப் பருவக்காற்றை' சுவாசிக்க அடுத்து மூன்று ஆண்டுகள் ஆனது. அது ஒரு மிகச்சிறிய பட்ஜெட் படம். நாயகன் விஜய் சேதுபதியின் முகம் யாருக்கும் தெரியாது. 'கூடல் நகர்’ இயக்குநரை மக்கள் மறந்துவிட்டார்கள். நாயகி, இசையமைப்பாளர் உட்பட யாருக்கும் மார்க்கெட் கிடையாது. ஆனால் கடுமையான உழைப்பின் காரணமாக தரமான படைப்பாக வந்ததால் தேசிய விருதுகள் வரை வென்று என்னையும் விஜய் சேதுபதியையும் தமிழ்த் திரையுலகில் காலூன்ற வைத்தது. அவர் அடுத்தடுத்த வெற்றிப்படங்களால் நல்ல உயரத்துக்குப் போனார்.
ஆனால் அந்த அளவுக்கு சுலபமான வெற்றி எனக்கு சாத்தியப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் வெறுமனே 7 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறேன். வழக்கமான மசாலாப்படங்கள் பண்ணும் மனநிலை எனக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். நாயகர்கள் ஆளும் இந்த சினிமாவில் என் கதைகளில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருப்பதுவும் இன்னொரு முக்கிய காரணம். எனவே எனக்கு எனது அடுத்த ஒவ்வொரு படம் கிடைப்பதும் முதல் படப்போராட்டம்தான்.
この記事は Andhimazhai の July 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Andhimazhai の July 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.