Facebook Pixel DINACHEITHI - NAGAI - May 21, 2025号のデジタル版にアクセス | Magzter.com

試す - 無料

DINACHEITHI - NAGAI - May 21, 2025

filled-star

Click here to filter issues by date range


その他のエディション:

DINACHEITHI - NAGAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - NAGAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

この号では

May 21, 2025

வரும் 23-ந் தேதி டெல்லி செல்கிறார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், பிரதமர் மோடியையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியோ அதே பலத்தோடு இன்னும் தொடர்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமலாக்கத்துறை தமிழகத்தில் அமைச்சர்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. பல இடங்களில் அடுத்தடுத்து சோதனையில் ஈடுபட்டது. குறிப்பாக செந்தில் பாலாஜி, கேஎன் நேரு, துரைமுருகனுக்கு சிக்கல் ஏற்பட்டது.

1 mins

குடியரசு தலைவர் எழுப்பியது மாநில உரிமை மீதான கேள்வி...

ஓர் அதிகாரத்தின் மீது எழுப்பப்பட்ட கேள்வி இப்போது உரிமை தொடர்பான கேள்வியாக மாறி நிற்கிறது. மாநில அரசின் மசோதாவை குறிப்பிட்ட கெடுவுக்குள் பரிசீலியுங்கள் என்று சாதாரண ஓர் அறிவுரையை தான் உத்தரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால் அதை தங்கள் அதிகாரத்துக்கு எதிரானதாக கருதி தேவையின்றி ஆளுநர்களும் குடியரசுத் தலைவர்களும் கொதித்து எழுந்துள்ளனர். உச்சநீதிமன்றத்திடம் அந்த உத்தரவு தொடர்பான விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் போட்டிருந்தது ஒரே ஒரு உத்தரவு. ஆனால் குடியரசு தலைவர் கேட்டிருப்பது ஒரு பிரதான கேள்வியும் அதற்கு உட்பட்ட 14 கிளை கேள்விகளும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மக்கள் நலம் சார்ந்தும் குடியரசுத் தலைவரின் கேள்விகள் தங்களது அதிகார பலம் சார்ந்தும் இருப்பது அவரது கேள்விகளைப் படிக்கும் பாமர மனிதர்களுக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும்.

1 mins

சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.05.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

5 mins

最近の問題

関連タイトル

人気カテゴリー