कोशिश गोल्ड - मुक्त

அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!

Kanmani

|

November 06, 2024

இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.

- தவா

அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கு வங்கத்தின் கூச்பெகாரில் மகாராஜா ஜிதேந்திர நாராயணனுக்கும் மராட்டிய இளவரசி இந்திரா ராஜேவுக்கும் பிறந்தவர் இளவரசி காயத்ரி தேவி. உலகின் தலைசிறந்த 10 அழகிய பெண்களில் காயத்ரி தேவியும் ஒருவர் என்று 'வோக்' பத்திரிகை அந்நாளில் புகைப்படம் வெளியிட்டது.

லண்டனில் பள்ளிப் படிப்பை முடித்து சுவிட்சர்லாந்தில் உயர்கல்வி பயின்றவர், போலோ விளையாட்டிலும் குதிரை மீது அமர்ந்து செய்யும் சாகசங்களிலும் சிறந்து விளங்கினார். வேட்டையாடுவது, விலையுயர்ந்த வெளிநாட்டு கார்களை வாங்கி ஓட்டுவது என வீர விளையாட்டுகளிலும் ஈடுபட்டார்.

காயத்ரி தேவி, சவாய் மான் சிங் மகாராஜாவை திருமணம் செய்து கொண்டார். 1965-ல் காயத்ரி தேவியின் கணவரை ஸ்பெயின் தூதராக இந்திய அரசு நியமித்தது. அந்த காலகட்டத்தில் இளவரசி காயத்ரி தேவியின் பார்வை அரசியல் பக்கம் திரும்பியது.

imageஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதியில் 1962, 1967, 1971ஆகிய தேர்தல்களில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் காயத்ரி தேவி.

அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸில் சேருமாறு காயத்ரி தேவிக்கு பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அழைப்பு விடுத்தார். ஆனால் எனக்குக் கொள்கைதான் முக்கியம் என்று கூறி அந்த அழைப்பை நிராகரித்தார் காயத்ரி தேவி.

எமர்ஜென்சி காலத்தில் பிரதமர் இந்திரா காந்தியையும், நெருக்கடி நிலையையும் எதிர்த்ததால், 5 மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அரசியலை விட்டு விலகிய காயத்ரி தேவி, சமூக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

தனது 89-ஆவது வயதில் கூட ஜெய்ப்பூரில் ஆக்ரமிப்புகள் அதிகரித்து வருவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

imageஅரசியலை விட்டு விலகி இருந்த நிலையிலும்... எம்.பி. தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகள் சார்பில் மீண்டும் மீண்டும் வாய்ப்பு வந்தது. இருந்தும் அந்த வாய்ப்புகளை புறந்தள்ளி விட்டார்.

Kanmani से और कहानियाँ

Kanmani

Kanmani

தூக்கி நிறுத்திய நம்பிக்கை!

தென்னிந்திய படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை நவ்யா நாயர், மீண்டும் 'ஒருத்தி' மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். திரிஷ்யம் 2 கன்னட ரீமேக் படத்திலும் நடித்தார். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகளவில் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாத நவ்யா, தன் திரையுலக பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு செல்ல விரும்பும் முதியவர்கள்!

முதுமை என கருதிவிட்டால் அவர்களை உபயோகம் இல்லாதவர்கள் என கருதும் காலம் இது.

time to read

1 mins

November 05, 2025

Kanmani

Kanmani

கமர்சியல் சக்ஸஸ் ரொம்ப முக்கியம்!

பிகில், 96, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

விசித்திரமான 'மறதி' கிராமங்கள்!

அது ஒரு அழகிய சிறிய கிராமம்.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

இன்னொருத்தி தேவை!

காலை நேரம். ஏழு மணி. \"அம்மா.... போயிட்டு வரேன்....\" மாடியிலிருந்து துள்ளிக் கொண்டு வந்த சரயூ கத்திக் கொண்டே இறங்கி வந்தாள்.

time to read

53 mins

November 05, 2025

Kanmani

Kanmani

மக்களை விட் 6 மடங்கு அதிகம்.. நகரங்களில் பெருகி வரும் எலிகள்!

நகரங்களில் பெருதி வரும் எலிகள்!

time to read

1 mins

November 05, 2025

Kanmani

Kanmani

எப்படி இருந்த அ.தி.மு.க. இப்படி ஆகிடுச்சே!

குடும்பங்களில் குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவது போல், அரசியலிலும் சில கட்சியினரை பீதியூட்டி கூட்டு சேர்க்க முயல்வதுண்டு.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

வைரம் - தங்கத் துகள் சோப்பூ

மன்னர் காலத்தில் குளியல் பொடியானது பலவிதமான இயற்கை மூலிகைளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

time to read

1 min

November 05, 2025

Kanmani

Kanmani

குறட்டைக்கு நன்றி!

தூக்கத் திற்கான அளவுகோல் குறட்டை அல்ல! ஒருசிலருக்கு அது எச்சரிக்கை மணி! குறட்டை ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

time to read

3 mins

November 05, 2025

Kanmani

Kanmani

தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் ஸ்மார்ட் செயலி சரண்யா!.

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில்... எங்கு திரும்பினாலும் அடிதான் என்ற நிலையில் பரிதாபகரமான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள்தான்.

time to read

3 mins

November 05, 2025

Translate

Share

-
+

Change font size