32 வருட கல்வி நிர்வாக சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்
Virakesari Weekly
|June 22, 2025
மலையகத்தில் கல்விப் பணியோடு சமூகப் பணியையும் இணைத்துக் கொண்டு பயணித்தோர் வெகு சிலரே. அத்தகைய சிலரில் ஒருவராக விளங்கிய ஹட்டன் கல்வி வலயத்தின் பிரதி கல்விப்பணிப்பாளரும், கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபருமான திருமதி சந்திரலேகா கிங்ஸ்லி கடந்த செவ்வாயன்று (17.06.2025) தனது அறுபதாவது அகவையில் அரச பணியினின்றும் ஓய்வு பெற்றுள்ளார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர உத்தியோகத்தரான இவர், கல்விப்பணிக்கு அப்பால் இலக்கிய படைப்பாளராக, பெண்ணுரிமை செயற்பாட்டாளராக, சமூகப்போராளியாக, மார்க்சிஸ கருத்தியல் வாதியாக விளங்கியவர். பேச்சு வன்மை, எதிர்ப்புணர்வு, கொள்கைப்பிடிப்பு என்பவற்றின் மூலம் ஏனைய பெண் ஆளுமைகளிலிருந்து வேறுபட்ட தனித்துவ ஆளுமையாளராக இவர் திகழ்கிறார்.
1965ஆம் ஆண்டு ஹட்டன் தோட்டத்தில் பிறந்த இவரது பெற்றோர் மாயழகு வேலம்மாள் தம்பதியர் ஆவர். ஆறு சகோதர சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் மூத்த பிள்ளையாவார். தந்தையின் தொழில் நிமித்தம் மஸ்கெலியா லக்ஸபான தோட்டம் இவரது வதிவிடம் ஆகிப்போனதால், தனது ஆரம்பக்கல்வியை லக்ஸபான இலக்கம் 02 வித்தியாலயத்தில் பெற்றுக் கொண்டார். அத்தோடு இடைநிலை மற்றும் உயர்தர கல்வி என்பவற்றை மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரியில் பெற்றுக் கொண்டார்.
यह कहानी Virakesari Weekly के June 22, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Virakesari Weekly से और कहानियाँ
Virakesari Weekly
மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு
வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு
1 min
August 24, 2025
Virakesari Weekly
ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்
யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
1 min
August 24, 2025
Virakesari Weekly
மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்
பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.
1 min
June 29, 2025
Virakesari Weekly
ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்
இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
அடுத்த கட்ட சாணக்கியம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.
3 mins
June 29, 2025
Virakesari Weekly
ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு
அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்
நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
சிக்கிக் கொண்ட கடற்படை
இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.
2 mins
June 29, 2025
Virakesari Weekly
புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்
இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி
பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.
1 min
June 29, 2025
Translate
Change font size

