कोशिश गोल्ड - मुक्त
வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகளின் நடவடிக்கையே இனச்சுத்திகரிப்பு
Vidivelli Weekly
|May 15, 2025
கனேடிய அரசாங்கம் கண்மூடித்தனமான வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக அலி சப்ரி குற்றச்சாட்டு
இலங்கையில் இனவழிப்பொன்று இடம்பெற்றது என்றால், வடக்கிலிருந்து முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் வெளியேற்றி விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மிகமோசமான இனச்சுத்திகரிப்பையே அத்தகைய இன வழிப்பாகக் கருதமுடியும் எனச் சுட்டிக் காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கனேடிய அரசாங்கம் நடுநிலையுடன் செயற்படுவதை விடுத்து, கண்மூடித்தனமான வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம், அந்நகர மேயர் பற்ரிக் பிரவுன் தலைமையில் கடந்த 10 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையை நினைவுகூரும் வகையில் இந்நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் மேயர் பற்ரிக் பிரவுனால் அடிக்கல் நாட்டப்பட்ட வேளையில், அதுகுறித்து அப்போது வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த அலி சப்ரி கடும் அதிருப்தியினை வெளிப்படுத்தியிருந்தார்.
அதேபோன்று கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் பிரகாரம் மே மாதம் 12 - 18 ஆம் திகதி வரையான ஒருவார காலம் ஒன்ராரியோ மாகாணத்தில் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தப்படும். அந்த ஒருவார காலத்தில் ஒன்ராரியோ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தமிழினப்படுகொலை தொடர்பிலும், உலகில் இடம்பெற்ற ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் அறிந்துகொள்வதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்தும் இலங்கை அதன் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தமிழின அழிப்பு நினைவகம் மற்றும் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவரது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
यह कहानी Vidivelli Weekly के May 15, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Vidivelli Weekly से और कहानियाँ
Vidivelli Weekly
மர்ஹும் அஷ்ரபின் ஒலுவில் வீடுமற்றும் காணி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணித்திருந்த வீடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1 mins
May 22, 2025
Vidivelli Weekly
இலங்கை-பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹினிதும செயலாளராக முஜிபுர் தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவியும் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
1 min
May 22, 2025
Vidivelli Weekly
மன்னார்-புத்தளம் வீதியை மூட நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானதே
வன்மையாக கண்டிக்கிறோம் என பாராளுமன்றில் ரிஷாத் தெரிவிப்பு
1 mins
May 22, 2025
Vidivelli Weekly
ஊவாவின் இளம் கல்வியியல் பேராசிரியர் ஜே.டி. கரீம்டீன்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஜே.டி. கரீம்டீன், பேராசிரியராக பதவியுர்த்தப்பட்டுள்ளார். இதற்கான அனுமதி திறந்த பல்கலைக்கழகத்தின் செனட் சபையினால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையின் கல்வித் துறையில் பணியாற்றுகின்ற இளம் பேராசிரியர்களில் ஒருவராக இவர் திகழ்கின்றார்.
1 mins
May 22, 2025
Vidivelli Weekly
அவள் கதை" மிஸ் கோலால் ஏற்பட்ட தொடர்பு மத்ஹபை மாற்றிய விவாக பதிவாளர்
இருள் சூழத்தொடங்கிய மாலை வேளையில் ஒரு பெண்ணின் குரல்...சேர்... திரும்பிப் பார்க்கிறேன்.
2 mins
May 22, 2025
Vidivelli Weekly
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின வைபவம்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு 7 ஜே.ஆர். ஜெயவர்தன நிலையத்தில் வாலிப முன்னணியின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
1 min
May 22, 2025
Vidivelli Weekly
உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்ற தொடரும் அரசியல் போராட்டம்!
இலங்கையிலுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கடந்த மே 6 ஆம் திகதி முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரங்களை யார் பெறப்போகின்றனர் என்ற தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றது
4 mins
May 22, 2025
Vidivelli Weekly
பலஸ்தீனத்தை ஆதரிக்கவும், காஸா மனிதாபிமான பேரழிவை கண்டிக்கவும் ஒன்றிணைந்த அரசாங்கமும் எதிர்க்கட்சியும்
காஸாவில் நிகழும் மனிதாபிமான பேரழிவினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், போர்நிறுத்தம் மற்றும் முற்றுகையை நீக்கவும் அழைப்பு விடுப்பதற்காக இலங்கையின் அனைத்து அரசியல் தலைவர்களும் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடினர்.
3 mins
May 22, 2025
Vidivelli Weekly
மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் ஐந்தாம் வருட நினைவேந்தல் நிகழ்வு
இலங்கை பேராதனை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை, அறபு மொழித் துறையின் முன்னாள் தலைவரும், பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முன்னாள் பணிப்பாளரும், கல்விமானுமான மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் ஐந்தாவது வருட நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 6.30 மணிக்கு கொழும்பு, மருதானை தெமடகொட வீதியிலுள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
1 min
May 22, 2025
Vidivelli Weekly
'இலங்கையில் துலங்கும் மர்மங்கள்' செவ்வாயன்று நூல் வெளியீட்டு விழா
இலங்கையில் நடைபெற்ற திகிலூட்டும் உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.கே.எம். அஸ்வர் எழுதிய 'இலங்கையில் துலங்கும் மர்மங்கள்' எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாயன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
1 min
May 22, 2025
Translate
Change font size