பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்
Dinamani Virudhunagar
|July 12, 2025
இந்திய தேர்தல் ஆணையம் தனது கடமையைச் செய்யாமல், பாஜகவின் நலன்களுக்காகப் பாடுபடுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.
-
புவனேசுவரம், ஜூலை 11: இந்திய தேர்தல் ஆணையம் தனது கடமையைச் செய்யாமல், பாஜகவின் நலன்களுக்காகப் பாடுபடுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.
மகாராஷ்டிரத்தைப் போல் எதிர்வரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் முறைகேட்டில் ஈடுபட பாஜக சதி செய்கிறது என்றும் அவர் கூறினார்.
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு எதிரான மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தப் பணியைத் தொடர தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி அளித்த நிலையில், ராகுல் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாஜகவின் வெற்றிக்கு உதவவே இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருத்தாகும்.
ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’ என்ற பேரணியில் ராகுல் பங்கேற்றுப் பேசியதாவது: மகாராஷ்டிரத்தில் வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகளே, அந்த மாநில பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை ஈட்டித் தந்தது. இத்தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலில் ஒரு கோடி பேர் சேர்க்கப்பட்டது எப்படி என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை.
மகாராஷ்டிர பாணியில், எதிர்வரும் பிகார் பேரவைத் தேர்தலிலும் முறைகேட்டில் ஈடுபட பாஜக சதியில் ஈடுபட்டுள்ளது.
यह कहानी Dinamani Virudhunagar के July 12, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Virudhunagar से और कहानियाँ
Dinamani Virudhunagar
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Virudhunagar
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Virudhunagar
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Virudhunagar
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Virudhunagar
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Virudhunagar
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Virudhunagar
கலப்படம் தடுக்க புதிய பால் கொள்கை: தமிழக அரசு முடிவு
பாலில் கலப்படத்தை தடுக்க புதிய பால் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Virudhunagar
அடிலெய்டு டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
1 min
December 19, 2025
Dinamani Virudhunagar
ஜார்க்கண்ட் முதல் முறையாக சாம்பியன்
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், ஜார்க்கண்ட் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியா ணாவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.
1 min
December 19, 2025
Dinamani Virudhunagar
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்
நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலானது 'பூலோக வைகுண்டம்', 'பெரிய கோயில்' என்றெல்லாம் போற்றப்படுகிறது.
2 mins
December 19, 2025
Translate
Change font size

