Facebook Pixel ஆதரித்தால் போதும் அடியேனை... | Dinamani Villupuram - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

ஆதரித்தால் போதும் அடியேனை...

Dinamani Villupuram

|

March 03, 2025

இடம்பெயரும் தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்தால் மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்நிலையில் முன்னேறிய மாநிலங்களில் நபர் பற்றாக்குறை ஏற்படும், வளர்ச்சிப் பணிகள், அத்தியாவசியப் பணிகள் முடங்கும்.

வீட்டில் தினசரி வேலைகளைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். யாரோ ஓர் ஏழைப் பெண் சில மணி நேரம் வீட்டு வேலை செய்துவிட்டுப் போகிறார் என்று அந்த அத்தியாவசிய வேலைக்கு மதிப்பு கொடுப்பதில்லை. கரோனா தாக்கியபோது சமூக இடைவெளியைக் காக்க வேண்டிய கட்டத்தில் வீட்டு வேலைப் பணியாளரும் வெளியில் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது தான் பலருக்கு அன்றாட வீட்டு வேலையின் மதிப்பு புரிந்தது.

அண்ணாவின் திரைக்கதையில் 1949-ஆம் வருடம் வெளிவந்த 'வேலைக்காரி' என்ற திரைப்படம், வீட்டு வேலை செய்பவர்களின் நிலையை நிதர்சனமாக சித்தரித்தது. வீட்டில் உள்ளவர்களின் ஏளனப் பேச்சு, ஏசுதலுக்கு உட்படுதல், குனிந்து நிமிர்ந்தால் வீட்டில் உள்ள ஆண்களின் வக்கிரப் பார்வையை தவிர்க்க கூனிக் குறுகுதல் போன்ற எண்ணற்ற சங்கடங்களைச் சகித்து, வயிற்றைக் கழுவ உழைக்கும் இந்த வர்க்கத்தினர் பற்றி சமுதாய விழிப்புணர்வு கொடுத்த படம் 'வேலைக்காரி'. கல்கி கிருஷ்ணமூர்த்தி தனது கல்கி இதழில், 'சமூகத்தை சீர்திருத்த வந்த ஒரு சிறந்த படம்' என்று விமர்சனம் எழுதினார். சட்டம் ஒரு இருட்டறை. அதிலே வக்கீலின் வாதம் ஒரு விளக்கு. ஆனால், அது ஏழைக்கு எட்டாத விளக்கு என்பன போன்ற வசனங்கள் மக்களை ஈர்த்தன.

சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் சூரிய காந்த், உஜ்ஜல் பூயான் அமர்வில், வீட்டுவேலை செய்பவர் சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் போது வீட்டு வேலை செய்பவர்களுக்கு தக்க சட்ட பாதுகாப்பு இல்லாத பிரச்னை 1959 - இல் இருந்து தொடர்ந்து வருகிறது என்பது வருந்தத்தக்கது என்று சுட்டிக் காட்டியுள்ளனர். வீட்டுப் பணியாளர்கள் வேலை வாய்ப்பு நிபந்தனைகள் மசோதா - 1959, அதற்குப் பிறகு பல மாதிரி சட்ட முன்வடிவுகள் 1989, 2004, 2008, 2015, 2016, 2017 ஆகியவை தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேற்றப்படாமல் காலாவதியாகின. இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்ட வேண்டும்; மத்திய அரசு உடனடியாக உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்து ஒருங்கிணைந்த சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Dinamani Villupuram

यह कहानी Dinamani Villupuram के March 03, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Villupuram से और कहानियाँ

Dinamani Villupuram

ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்

time to read

1 mins

June 10, 2026

Dinamani Villupuram

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Dinamani Villupuram

மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

2 mins

June 10, 2026

Dinamani Villupuram

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் திங்கள்கிழமை கடிதம் எழுதினர்.

time to read

1 min

June 09, 2026

Translate

Share

-
+

Change font size