कोशिश गोल्ड - मुक्त
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...
Dinamani Vellore
|August 22, 2025
மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஆக. 21: 'அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறும்போது நீதிமன்றங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்குமா?' என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத்தலைவர் கடந்த மே மாதம் அனுப்பிய தெளிவுரை கோரும் கடிதத்தில் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். அக்கடிதத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு அனுமதித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்றாம் நாளாக வியாழக்கிழமையும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தா, 'ஒரு குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கத்தக்க ஒரு வழக்கில் நீதிமன்ற விசாரணை ஏழு ஆண்டுகள் கடந்து நடக்கிறது. உடனே குடியரசுத் தலைவர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த வழக்கில் தாமே தீர்ப்பளித்து குற்றவாளிக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியுமா?
அந்தந்த அரசியல்சாசன அமைப்புகளுக்குரிய அதிகாரங்கள் தெளிவாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை தங்களுக்குரிய கடமையை வரம்புக்குள்பட்டு ஆற்ற வேண்டும்' என்று வாதிட்டார்.
அவரது வாதத்துடன் உடன்படாத தலைமை நீதிபதி கவாய், நீதிபதி நரசிம்மா ஆகியோர், 'அரசியலமைப்பின் பாதுகாவலராக உச்சநீதிமன்றமே விளங்குகிறது. ஒருவேளை அரசியலமைப்பின் ஒரு அமைப்பு எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் அதற்குரிய கடமையை ஆற்ற மறுக்குமானால் அரசியலமைப்பின்படி நிறுவப்பட்ட நீதிமன்றங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு, 'இதில் நாங்கள் தலையிட முடியாது, நாங்கள் சக்தியற்றவர்கள்' என்று வேடிக்கை பார்க்க முடியுமா? என்று கேட்டனர்.
இதையடுத்து துஷார் மேத்தா, 'ஒவ்வொரு அமைப்பும் அரசியலமைப்பின் பாதுகாவலரே. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றம் தன்னிச்சையாக சட்டத்தை இயற்றும் அதிகாரத்தை கையில் எடுத்துச் செயல்பட முடியாது' என்றார்.
यह कहानी Dinamani Vellore के August 22, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Vellore से और कहानियाँ
Dinamani Vellore
காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.
1 min
July 01, 2026
Dinamani Vellore
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Vellore
மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Vellore
தவெக அரசு 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வாக்கு தவற வாய்ப்பில்லை என்பதால், தவெக அரசு 5 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
July 01, 2026
Dinamani Vellore
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Vellore
ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Vellore
ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Vellore
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min
June 30, 2026
Dinamani Vellore
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani Vellore
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Translate
Change font size
