मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष
The Perfect Holiday Gift Gift Now

ஒரு நிலையற்ற அமைதி!

Dinamani Tiruvallur

|

May 24, 2025

பயங்கரவாதிகளுக்கு நிதி அளிக்க, சர்வதேச நிதியுதவியைப் பயன்படுத்த பாகிஸ்தான் காட்டும் முனைப்பை உலக சமுதாயம் அலட்சியப்படுத்த முடியாது. பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை உலக சமுதாயம் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், எந்தவொரு நிதியும் பயங்கரவாத செயலுக்காக திருப்பி விடப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ரே நேரத்தில் சண்டை நிறுத்த அறிவிப்பும் நமது ஆயுதப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையும் தொடருவது அவசியமாகிறது, ஏனெனில் பொய்த்துப் போன உத்தரவாதங்களை அள்ளிவீசும் வரலாற்றுபூர்வ பின்னணியைக் கொண்ட நாடு பாகிஸ்தான். உள்நாட்டிலேயே பயங்கரவாதத்தை அந்நாடு வளர்த்தெடுப்பதற்கான மறுக்கமுடியாத ஆதாரங்களுக்கு என்றும் பஞ்சமில்லை.

பாகிஸ்தானே ஐசி-814 விமான கடத்தலை ஏற்பாடு செய்தது, மும்பை 26/11 தாக்குதல்களுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது, உலகின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனுக்கு அதன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இருந்து குறைவான தொலைவில் ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியது, டேனியல் பேர்ல் என்ற வெளிநாட்டு செய்தியாளரைக் கொன்ற கொலையாளிகளைப் பராமரித்தது என இந்தப் பட்டியல் முடிவின்றி நீள்கிறது.

தமது நாடு பயங்கரவாத தளங்களை இயக்குவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் ஒப்புக்கொண்டார். அந்த நாட்டின் விமானப்படை துணைத் தளபதி ஏர் வைஸ் மார்ஷல் '2019' புல்வாமா தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டார். அதை பாகிஸ்தானின் தந்திரோபாய புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என அவர் கூறினார்.

நமது ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்', பாகிஸ்தானின் பயங்கரவாத வரலாறுக்கும் பஹல் காம் பயங்கரவாதத் தாக்குதல்களின்போது நடந்த கொடூரப் படுகொலைகளுக்கும் ஒரு துல்லியமான, பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் ஈடுகொடுக்கப்பட்ட பதிலடியாக இருந்தது. இந்திய ஆயுதப்படைகள் பயங்கரவாதத் தளங்களை அழித்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ராணுவத்தின் சட்ட விரோத வன்முறை செயல்பாடுகளுக்குப் பிறகு, அதன் ராணுவ இலக்குகளைத் தாக்கியதுடன் அந்நாட்டின் வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் நிலையங்களை வெற்றிகரமாக அழித்தன.

இரு தரப்பு சண்டை நிறுத்த முடிவு மிகவும் வியப்பான முறையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் அவரது அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளரால் அதேபோன்ற அறிவிப்பு வெளியானது. இருவரும் காஷ்மீர் குறித்த தேவையற்ற மேற்கோள்களைக் குறிப்பிட்டு, நடுநிலை தளத்தில் மத்தியஸ்தத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதில் முக்கியமாக, அரசு ஆதரவு பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக குறிப்பிடுவதை அவர்கள் தவிர்த்தனர்.

Dinamani Tiruvallur से और कहानियाँ

Dinamani Tiruvallur

ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதி தற்கொலை

ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvallur

ஐசிடி வரி விதிப்பு, சூரிய மின் உற்பத்தி மானியம்: இந்தியா மீது சீனா புகார்

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ஐசிடி) சாதனங்கள் மீதான வரிகள், சூரிய மின் உற்பத்தி மானியங்கள் தொடர்பாக இந்தியாவுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பிடம் சீனா வெள்ளிக்கிழமை மனு அளித்தது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvallur

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

அமெரிக்காவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை இந்தியாவின் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் வரும் டிச.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvallur

4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு

நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvallur

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.

time to read

2 mins

December 20, 2025

Dinamani Tiruvallur

சபரிமலை தங்கக் கவச வழக்கு: சென்னை நிறுவன சிஇஓ உள்பட இருவர் கைது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகர் மற்றும் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்களில் இருந்து தங்கம் மாயமான வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பங்கஜ் பண்டாரி, கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்த நகைக் கடை அதிபர் கோவர்தன் ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvallur

நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி

சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvallur

5 ஆண்டுகளுக்கும் நானே கர்நாடக முதல்வர்: சித்தராமையா

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வராக நீடிப்பேன் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvallur

வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை

வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Tiruvallur

ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா

கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.

time to read

1 min

December 20, 2025

Translate

Share

-
+

Change font size