Facebook Pixel மகளிரின் போராட்டமும் உரிமைகளும்... | Dinamani Tiruvallur - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

மகளிரின் போராட்டமும் உரிமைகளும்...

Dinamani Tiruvallur

|

March 08, 2025

இன்றைய நவீன பெண் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் என அனைவரும் பணியிடத்தில் தங்களுக்கான பாதுகாப்பின்மை, ஆண்-பெண் பாலியல் பாகுபாடு, உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர பணி நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.

உலகம் முழுவதும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தின கொண்டாட்டங்கள் வாழ்த்துகள் அதிகரித்து வருகின்றன.

இந்த தினம் எப்போது தோன்றியது, அதன் பின்னணி என்ன? என்ற வரலாற்றை அனைவரும் அறிந்து கொண்டால்தான் தற்போதைய சூழலில் உழைப்பில் ஈடுபடும் பெண்களின் சூழ்நிலை, பிரச்னைகள் குறித்து புரிந்து கொள்ள முடியும்.

1820-ஆம் ஆண்டு புதிய பிரிட்டனில் முதன்முதலாக தையல் பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு 1844-ஆம் ஆண்டு நடைபெற்ற கம்யூனிச உலகக் கூட்டத்தில் ஜவுளி ஆலையில் பணியாற்றும் பெண்களுக்கான போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளிகளின் 10 மணி நேரப் பணி நேரம், தொழிற்சாலைகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஆகியவை குறித்து இந்தப் போராட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

குறைவான கூலி கொடுத்தால் போதும்; அதிக மணி நேரம் வேலை வாங்கலாம் என்பதால் பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். குறைவான கூலி; 15 மணி நேரம் வேலை; கடுமையான பணி; கடுமையான அபராதங்கள்; காற்றோட்டம் - வெளிச்சம் இல்லாத பணிச்சூழல்; குழந்தைகளுக்கு அதிகப் பணி நேரம் என்று மோசமான சூழ்நிலை நிலவியது.

இதை எதிர்த்து அவ்வப்போது பெண் தொழிலாளர்கள் போராடி வந்தனர். ஜெர்மனிய தொழிற்சங்கத் தலைவரும் சோஷலிச ஜனநாயக கட்சியின் முக்கியத் தலைவருமான கிளாரா ஜெட்கின் பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, 1889-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கம்யூனிச உலகக் கூட்டத்தில் விரிவாக விளக்கி பேசினார்.

அதிகமான பணி நேரம், மிகக் குறைவான கூலி, மிக மோசமான பணியிடம் - குறிப்பாக, பெண்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் மற்றும் மதிப்பு கிடைக்காதது ஆகியவை குறித்து விளக்கிப் பேசினார். மேலும், ஆண் தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம்தான் பெண் தொழிலாளர்கள் விடுதலை அடைய முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

Dinamani Tiruvallur

यह कहानी Dinamani Tiruvallur के March 08, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tiruvallur से और कहानियाँ

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvallur

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

இடதுசாரிகள், பாமக, விசிக வலியுறுத்தல்

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvallur

சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvallur

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvallur

லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Tiruvallur

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvallur

முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்?

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvallur

கோயில் நிதி பயன்பாடு: சேகர் பாபு-அமைச்சர் ரமேஷ் காரசார விவாதம்

அடிப்படை வசதிகள் இல்லாத குன்னூர் விநாயகர் கோயிலுக்கு ரூ.10 கோடியில் வாகன நிறுத்தம் கட்ட முந்தைய திமுக அரசு உத்தரவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size