कोशिश गोल्ड - मुक्त
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்- ஒரு மக்கள் பணி
Dinamani Tiruppur
|December 09, 2025
எனது பள்ளிப் பருவம் முதல் சுமார் 10 ஆண்டுகள், காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய தீவிர தொண்டன் என்ற முறையில், எனக்கு, வாக்காளர் பட்டியல் குறித்த சிறப்பு தீவிர திருத்த நடைமுறை (எஸ்ஐஆர்) மீதான அண்மைக் கால விவாதம் நகைச்சுவையாக உள்ளது.
தற்போது எஸ்ஐஆர் என்று அழைக்கப்படும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, அரசியல் தொண்டனாக நான் பணியாற்றிய போது, கட்சி ஊழியர்களின் வழக்கமான தேர்தல் செயல்பாடாகவே இருந்தது. கடந்த 1960-களிலிருந்து நான் வசிக்கும் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அந்தப் பகுதியில் காங்கிரஸ் தலைவராக இருந்த எனது சட்ட ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி, நானும் இதர தொண்டர்களும் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டுக்கும், குடிசைக்கும் நேரில் செல்வது வழக்கமாக இருந்தது. எங்கள் கைகளில் இருக்கும் வாக்காளர் பட்டியலை வைத்து அதில் இருப்பவர்கள் காலமாகி இருந்தாலும், புதிதாக குடி வந்திருந்தாலும், வேறு இடத்துக்கு மாற்றலாகி இருந்தாலும் கட்சியின் தலைமையின் வாயிலாக எழுத்துபூர்வமாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிப்போம்.
புதிய வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பது, உயிரிழந்த அல்லது வேறு இடங்களுக்கு மாற்றலான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது மற்றும் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பது போன்ற பணிகளில் நாங்கள் உதவுவோம். இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உதவும் காங்கிரஸ் கட்சியின் எஸ்ஐஆர் அணியாக நாங்கள் செயல்பட்டோம். திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தியதால், எஸ்ஐஆர் பணிகளில் திறம்படச் செயல்பட்டார்கள்.
இன்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்ளும் பணியை அன்று கட்சித் தொண்டர்கள் செய்தனர். வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ஒருங்கிணைந்து பணியாற்றின. இதை மற்ற கட்சிகளின் எஸ்ஐஆர் அணியும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இன்று மயிலாப்பூர் வீதிகளில் நான் நடந்து செல்கையில், ஒரு சில வீடுகளுக்குச் சென்றிருந்த தருணத்தை இன்னும் நினைவுகூர்கிறேன். அந்தக் காலத்துடன் ஒப்பிடும்போது, இன்றைய அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டு, மக்கள் பணியாக தாங்களும் எஸ்ஐஆர் நடைமுறையில் ஈடுபட்டு வந்தோம் என்பதை அறியாமல் இருப்பதை, தற்போது எஸ்ஐஆர் குறித்து நடந்து வரும் சர்ச்சைக்குரிய விவாதம் அம்பலப்படுத்துகிறது.
यह कहानी Dinamani Tiruppur के December 09, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruppur से और कहानियाँ
Dinamani Tiruppur
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Tiruppur
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani Tiruppur
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Tiruppur
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Tiruppur
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Tiruppur
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Tiruppur
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Tiruppur
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Tiruppur
4-ஆம் காலாண்டு... ஒஎன்ஜிசி லாபம் ரூ.6,650 கோடி
பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஒஎன்ஜிசி), கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.6,649.97 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Tiruppur
அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...
அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2 mins
May 28, 2026
Listen
Translate
Change font size

