कोशिश गोल्ड - मुक्त

வாழ்வியலைச் சித்திரிக்கும் கல்வெட்டுகள்

Dinamani Tiruppur

|

August 17, 2025

வரலாற்றுச் சிறப்புடைய ‘பேளூர்’, அதன் சுற்றுப்புறக் கிராமங்களான செக்கடிப்பட்டி, நீர்முள்ளிக்குட்டை, புழுதிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் மன்னர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

- -பெ.பெரியார்மன்னன்

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி அருகே வசிஷ்ட நதிக்கரையில்தான் இந்த ஊர்கள் அமைந்துள்ளன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வசிஷ்டநதியானது ‘நிவா’ நதி என்று அழைக்கப்பட்டுள்ளது. பேளூரை ‘திருவேள்வியூர்’, ‘வேள்வியூர்’ என்ற பெயர்களில் பல சிற்றரசர்கள், சோழர்கள், நாயக்கர்களின் பேரரசு கீழ் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்களின் அறப்பணிகள், கொடைகள், மேற்கொண்ட போர்கள், சூடிய வெற்றிகள், நீர்மேலாண்மை போன்றவற்றை விளக்கும் பத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.

அவற்றில் குறிப்பிடத்தக்க விஷயங்கள்:

அங்காளம்மன் கோயிலில் அடிப்பகுதி உடைந்த நிலையிலுள்ள ஒரு கல்வெட்டில், எட்டு வரிகள் உள்ளன. கடைசி மூன்று வரிகள் சிதைந்துள்ளன. ‘ஸ்வஸ்திஸ்ரீ மதிரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்…’ என கல்வெட்டுத் தொடங்குகிறது. இந்த அடைமொழி முதலாம் பராந்தகச் சோழனுக்கு உரியது. அவரது 41-ஆவது ஆட்சி ஆண்டில், அதாவது 948-இல் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் மூலம் பத்தாம் நூற்றாண்டில் பேளூர் பகுதியானது சோழர்களின் ஆட்சியில் இருந்துள்ளதை அறியலாம்.

நரசிங்கபுரத்தில் உள்ள கல்வெட்டில் கோயிலுக்கு விளக்கு எரிக்கத் தானம் கொடுத்ததை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஐந்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதலாம் பராந்தகச் சோழனுக்குப் பிறகு ஆட்சி செய்த இரண்டாம் ஆதித்யனின் 959-ஆம் ஆண்டு கல்வெட்டு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். வீரபாண்டியனை ஆதித்ய கரிகாலன் தோற்கடித்ததும் தலையை வெட்டி எடுத்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dinamani Tiruppur

यह कहानी Dinamani Tiruppur के August 17, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tiruppur से और कहानियाँ

Dinamani Tiruppur

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு

ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: ரஷிய சர்வரில் இருந்து வந்த மின்னஞ்சல்

திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

சாலை விபத்து: சமையலர் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலர் உயிரிழந்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Tiruppur

15.வேலம்பாளையத்தில் செப்டம்பர் 3-இல் மின்தடை

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பர் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

எம்.பி. சீட் விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்

பிரேமலதா குற்றச்சாட்டு

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruppur

வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size