कोशिश गोल्ड - मुक्त
முடக்கம் தவிர்ப்பீர்!
Dinamani Tiruppur
|August 16, 2025
மக்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலமாக தங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்துகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் கூடும் மன்றம்தான் நாடாளுமன்றம். அரசின் முதன்மை அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது என்பதை ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்களும் உணர வேண்டும்.
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமுகமாக நடந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கூட்டத் தொடர் தொடங்கும்போதும் முதல் ஒரு வாரம் எந்த அலுவலும் நடக்காமல் முடங்கிப் போவதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இப்போது நடக்கும் மழைக்கால கூட்டத்தொடரிலும் அதுதான் நடந்தது.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள், கூட்டம் தொடங்கிய ஒரு சில நிமிஷங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மதியம்வரை ஒத்திவைக்கப்பட்டு, அதன் பிறகு மதியமும் இதே அமளி தொடர அன்று முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் இதுதான் நடந்தது. தொடர்ந்து சுமார் ஒரு வாரம் இப்படித்தான் நடந்தது.
ஜூலை 28-ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து 16 மணி நேரம் விவாதம் நடக்கும் என்ற ஒப்புதலுடன் அவை அமைதியாக நடந்தது. அன்றுகூட பிகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, மீண்டும் அவை கூடியதும் சுமுகமான சூழ்நிலை நிலவியது.
பொதுவாக, ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்கும். இந்தக் குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்தத் தொடரில் முக்கியமாக விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்வார்கள்.
यह कहानी Dinamani Tiruppur के August 16, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruppur से और कहानियाँ
Dinamani Tiruppur
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு
ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: ரஷிய சர்வரில் இருந்து வந்த மின்னஞ்சல்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சாலை விபத்து: சமையலர் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலர் உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 mins
September 01, 2025
Dinamani Tiruppur
15.வேலம்பாளையத்தில் செப்டம்பர் 3-இல் மின்தடை
15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பர் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
எம்.பி. சீட் விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்
பிரேமலதா குற்றச்சாட்டு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Translate
Change font size