कोशिश गोल्ड - मुक्त
அறிவின் அமுதூற்று ‘நூலகம்’!
Dinamani Tiruchy
|August 12, 2025
மக்களைக் கொன்றால் ஒரு தலைமுறையைத்தான் அழிக்க முடியும்; அதேநேரத்தில், நூலகங்களை அழித்தால் ஒட்டுமொத்தமாக ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிட முடியும். அதைத்தான் சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றியவர்கள் செய்தார்கள்.
இந்திய நூலக அறிவியலின் தந்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகருமான முனைவர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தேசிய நூலக தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக, ஒரு நாட்டின் நூலக வளர்ச்சியைக் கொண்டே அந்த நாட்டின் அறிவுச் செழுமை அளவிடப்படுகிறது. இந்தியாவில் தற்போது எங்கெங்கும் தேர்வுப் பயிற்சிக் களங்களும், உயர் பதவி தேர்வுக்கூடங்களும் பரவியிருக்கின்றன. அந்த மாணவர்களுக்கு விருந்தோம்புகைகளாக நூலகங்கள்தான் மிளிர் கின்றன. எங்கள் நூலகத்தை எந்த நேரமும் நாங்கள் மூடுவதில்லை என்று அறிவிக்கும் நூலகங்கள் வளர்ந்து வருகின்றன.
நடமாடும் நூலகங்கள் வீதி முனைகளில் நிற்பதெல்லாம் நமக்குப் பெருமையாக இருக்கிறது. நூலக விழாக்கள், நூலக இதழ்கள் பெருகி வருகின்றன. புத்தகங்கள் படிப்பது மூளைக்கு நலமளிக்கக்கூடிய ஒன்று. புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கும், அறிவாற்றலைப் பெருக்கிக்கொள்ளவும், சவால்களை எதிர்கொள்வதற்கும், எழுத்தாளராக உருவாகவும், வெளிப்படையான அறிவார்ந்த உரையாடல்கள் நடத்தவும் புத்தகங்கள் படிப்பது அவசியமாகிறது.
கி.மு. 300-ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் அருமை-பெருமைகளைக் கேட்டு வியந்த மாவீரன் அலெக்சாண்டர், எகிப்தின் எழிலில் மயங்கி ‘அலெக்சாண்டிரியா’ என்ற நகரை உருவாக்கினார். அங்குதான் மிகப் பெரிய நூலகத்தை எழுப்பினார். உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களை எல்லாம் திரட்டி 10 லட்சம் புத்தகங்களை அந்த நூலகத்தில் வைத்தார்.
அந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காகவே உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் அலெக்சாண்டிரியாவுக்கு வந்தனர். அங்கிருந்துதான் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் தத்துவங்கள், விஞ்ஞானம், அளவையியல், புவியியல், சமய தத்துவார்த்தங்கள் பரவத் தொடங்கின.
எகிப்தியர்கள் பாப்பிரஸ் (தருப்பை) புல்லில் தயாரிக்கப்பட்ட ஏடுகளில் எழுதி அலெக்சாண்டிரியாவில் இருந்த நூலகத்தில் சேமித்து வைத்திருந்தனர். ரோமானியர்களில் புகழ்வாய்ந்த ஜூலியஸ் சீசர், ரோம் நாட்டில் வாழ்ந்த வசதியானவர்களிடம் நன்கொடை வாங்கி பொது நூலகங்களை அமைத்தார். கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இப்படி 28 பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருந்தன.
यह कहानी Dinamani Tiruchy के August 12, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruchy से और कहानियाँ
Dinamani Tiruchy
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tiruchy
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tiruchy
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Tiruchy
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Tiruchy
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.
1 min
June 12, 2026
Dinamani Tiruchy
காணிக்கையாக சிலைகள்!
அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.
1 mins
June 12, 2026
Dinamani Tiruchy
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Tiruchy
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Tiruchy
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Tiruchy
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Translate
Change font size

