कोशिश गोल्ड - मुक्त
தீர்வுகளைத் தேடுவோம்!
Dinamani Thanjavur
|March 14, 2025
சரியான புரிதல் இல்லாத பதின்ம வயதில் கைப்பேசிப் பயன்பாடு பல தீங்குகளுக்கு வழி கோலுகிறது. அதனால் இணையவழி வகுப்புகள், கணினி மற்றும் கைப்பேசி வழித் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைப் பள்ளிகளில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும்,
சில காலமாக, குற்றங்களில் ஒரு புதிய பரிமாணத்தைக் காண்கிறோம். அதிக அளவில் பதின்ம வயதுச் சிறுவர்கள், அதிலும் பள்ளி மாணவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அதே வேளையில், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை எல்லை கடந்து போய்க் கொண்டிருப்பது இந்தச் சமுதாயத்தின் மீது கோபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கள்ளம், கபடம் இல்லாத பிஞ்சுகளில் ஒரு சாரார், அதாவது சிறுவர்கள் குற்றவாளிகளாகவும், மற்றொரு சாரார், அதாவது சிறுமியர் குற்றமிழைக்கப்படுபவர்களாகவும் மாறிக் கொண்டிருப்பது, நம் சமுதாயத்தில் ஆண், பெண் பேதம் எவ்வளவு அதிகம் உள்ளது என்பதையே காட்டுகிறது.
இந்தக் கொடுங் குற்றங்களை அலசி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமன்று. அதுதான் தினம் தினம் இவற்றைப் பற்றிய விலாவாரியான செய்திகளையும், ஒன்றுக்கும் உதவாத அறிவிப்புகளையும், பயனில்லாத சட்டங்களையும் கண்டும் கேட்டும், இயலாமையில் மனம் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறோமே, அது போதாதா? பேசியது போதும், தீர்வுகளைத் தேடுவோம்!
அரசு உடனடியாகச் செய்யக் கூடியவை, செய்ய வேண்டியவை: பள்ளி செல்லும் சிறுமிகளை வக்கிர மனங்கள் கொண்ட ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். சென்னையில் பல பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து அரசிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். 'மாணவிகளுக்குத் தனிப் பள்ளிகள்; அதில் ஆசிரியைகள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட வேண்டும்' என்பதே அந்தக் கோரிக்கை. அரசு இதை உடனடியாக, அதாவது வரும் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் நிர்வாகச் சிக்கல் ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஏற்கெனவே ஒரு பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகளை மாணவர்களுக்கு ஆசிரியர்களை நியமித்து ஆண்கள் பள்ளியாகவும், வேறொரு பள்ளியை ஆசிரியைகளை நியமித்து மாணவிகளுக்கும் நடத்தலாம். ஆண்கள் பள்ளியில் தலைமைப் பொறுப்பிலிருந்து கீழ்நிலை வரை ஆண்களே பணியமர்த்தப்பட வேண்டும்; அதே போல் பெண்கள் பள்ளியில் அனைத்து நிலைகளிலும் பெண்களே பணியமர்த்தப்பட வேண்டும்.
यह कहानी Dinamani Thanjavur के March 14, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Thanjavur से और कहानियाँ
Dinamani Thanjavur
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Dinamani Thanjavur
கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்
தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
2 mins
June 28, 2026
Dinamani Thanjavur
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Thanjavur
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Thanjavur
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Thanjavur
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Thanjavur
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Thanjavur
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Thanjavur
ஜம்மு-காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; நால்வர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் மலைப் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர்.
1 min
June 28, 2026
Dinamani Thanjavur
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Translate
Change font size
