कोशिश गोल्ड - मुक्त
அத்வைதம் - வெற்றிக்கு வழி!
Dinamani Pudukkottai
|March 04, 2025
முழுமனதோடு ஆணித்தரமாக நம்பும் ஒன்றை 'வேதவாக்கு' என்று சொல்வது வழக்கம். வேதவாக்கு என்றால் என்ன? வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள். ஆக, வேதங்கள் சொல்வதே நமக்குப் பிரதானம். ஏன் வேதங்கள் நம் வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன? வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
தத்துவம் என்பதை வேதாந்தம் என்று சொல்கிறோம். வேதம், அந்தம் என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து வேதாந்தம் ஆகிறது. வேதத்தின் இறுதிப் பகுதியாக வருவதனால் இப்பெயர் ஏற்பட்டது. வேதத்தின் முடிந்த முடிவாக இருப்பதனாலும் வேதாந்தம் என்று சொல்லலாம். உபநிஷதங்கள் என்றும் இதனைச் சொல்கிறோம்.
வேதாந்தத்துக்கு நம் அன்றாட வாழ்வில் அவசியம் இருக்கிறதா? தத்துவம் எல்லாம், வாழ்க்கையே வெறுத்துப் போனவர்கள் பேசுவதும் படிப்பதும் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம்? ஆனால், வேதவாக்குக்கு எப்படி அன்றாட வாழ்வில் இத்தகைய மதிப்பு உண்டாயிற்று? எனில், உலகியல் வாழ்க்கையில் இதற்கு இடம் உண்டா?
வேதம் சொல்லும் தத்துவம் அத்வைதம். இந்தத் தத்துவமானது 'நான் யார்?' என்ற ஆன்மத் தேடலுக்கு விடை சொல்வது என்று கேட்டிருப்போம். ஆனால், இது ஆன்மத் தேடலோடு நம் அன்றாட வாழ்வை வெற்றிகரமாக வாழ்வதற்கும் கற்றுத் தருவது ஆகும். சமூக வாழ்க்கை சிறக்கவும், தனிமனித வாழ்க்கை மேம்படவும் இது உதவும்.
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமூகம் மலர அத்வைதம் வழிகாட்டுகிறது. அத்வைதம் என்றால் இரண்டாக இல்லாமல் இருப்பது என்று பொருள். அதாவது, இந்த மண்ணின் ஜீவன்கள் அனைத்தும் ஒன்றே, வேறுவேறானவை அல்ல. இதனை எளிமையாகப் புரிந்து கொள்ள பாரதி, காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம் என்று விளக்கினார். அதாவது, அத்வைதம் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதையும் தாண்டி இந்த உலகமே ஒரே பொருள் என்கிறது.
'யஸ்தே கந்தஹ புருஷேணு ஸ்த்ரீஷு பும்ஸுஹு பாகோ ருசிஹி யோ அஸ்வேஷு வீரேஷு யோ ம்ருகேஷுத ஹஸ்திஷு கன்யாயாம் வர்சோ யத் பூமே தேனாஸ் மாம் அபி ஸம் ஸ்ருஜ மா நோத்விக்ஷத கஸ்சன' இது அதர்வண பூமி சூக்த 25-ஆம் மந்திரம். இதன் பொருள், உன் மணம் ஆண்களிடத்தும் பெண்களிடத்தும் உள்ளது. உன் ஆண்மையும் கம்பீரமும் மக்களிடத்தில் உள்ளது. அது வீரனிடத்திலும் குதிரையிலும் காணப்படுகிறது. அதை வனவிலங்கிடமும், யானையிடத்திலும் காணலாம். உன்னுடைய பிரகாசம் இளம் பெண்களிடத்தில் மிளிர்கிறது, இத்தனையையும் எனக்குக் கொடு, என்னை எவரும் வெறுக்காமல் இருக்கட்டும்.
यह कहानी Dinamani Pudukkottai के March 04, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Pudukkottai से और कहानियाँ
Dinamani Pudukkottai
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Pudukkottai
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Pudukkottai
'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்
நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் புதிய கல்விமுறையை வலியுறுத்தி, காங்கிரஸ் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
1 min
June 28, 2026
Dinamani Pudukkottai
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Pudukkottai
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Pudukkottai
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Pudukkottai
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Dinamani Pudukkottai
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Pudukkottai
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Pudukkottai
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Translate
Change font size
