कोशिश गोल्ड - मुक्त
புலமை கனிந்த போற்றிப் பாடல்
Dinamani Puducherry
|November 30, 2025
பத்தொன்பதாம் நூற்றாண்டைத் தம் புலமைத் திறத்தால் ஆண்டவர் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவ ருக்குச் சைவமும் தமிழுமே மூச்சு. மறைவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்புவரை கவிதை பாடிய வர். எந்தக் கருத்தை அறிந்தாலும் அதை மேலும் அழகுபடுத்திப் பாடுவது அவருக்கு இயல்பு. நலி வுற்றுப் படுக்கையில் கிடந்த அவரைக் காண வந்த கஞ்சனூர் அக்கினிலிங்க சாஸ்திரி, சிவா னந்த லகரியில் உள்ள 'ஸதா மோஹ அடவ்யாம்' என்னும் பாடலை விளக்கினார்.
“சிவனே! எங்கும் நிறைந்தவனே! தலைஓடு ஏந்திப் பிச்சைக்குச் செல்பவனே! என் மனம் என்னும் குரங்கு எப்போதும் மோகம் என்னும் காட்டில் திரிகிறது. பெண்களின் மார்பகமாகிய மலைகளில் கூத்திடுகிறது. ஆசை என்னும் கிளை களில் கண்டபடி சுற்றுகிறது. அதை அன்பென் னும் கயிற்றால் கட்டி உன் வசம் ஆக்கிக்கொள்” என்பது அப்பாடலின் கருத்து. அதைக் கேட்டு மகிழ்ந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உடனே அந் தப் பாட்டின் இறுதிப் பகுதியை, தில்லையில் ஆடும் பெருமானே! மனக் குரங்கினைப் பக்தி என்னும் கயிற்றால் கட்டி அதையும் உன்னோடு சேர்த்துக்கொண்டு பிச்சைக்குச் செல்க” என்று சிறிது மாற்றி மெருகூட்டி,
மோகமாம் அடவி திரிந்து அரி வையர்தம் முலைக்குவட்டிடைநடம் ஆடித் தாகமார் ஆசைத் தருக்குலம் தோறும் தாவுமென் புன்மனக் குரங்கைப் பாகமார் பத்தி நாண்கொடு கட்டிப் பலிக்குநீ செல்கயான் கொடுத்தேன் ஏகநாயகனே! தில்லையில் ஆடும் இறைவனே! எம்பெரு மானே.
என்று பாடினார். இத்தகைய பிள்ளையவர் கள் சேக்கிழாரிடத்தும் சிவஞான முனிவரிடத் தும் ஈடுபாடு கொண்டவர். இதற்குச் சான்று, உறையூர்ப் புராணத்தில் திருநாவுக்கரசர் மீது அவர் பாடியுள்ள போற்றிப் பாடல்.
சேக்கிழார் பெரிய புராணத்தில் நான்கு இடங்களில் திருநாவுக்கரசரின் தோற்றப் பொலிவைப் பாடியுள்ளார்.
यह कहानी Dinamani Puducherry के November 30, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Puducherry से और कहानियाँ
Dinamani Puducherry
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Puducherry
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Puducherry
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Puducherry
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Dinamani Puducherry
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Puducherry
மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக் கிழமை காலை விநாடிக்கு 4,920 கன அடியாகக் குறைந்தது. எனினும், நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்தது.
1 min
December 01, 2025
Dinamani Puducherry
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani Puducherry
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா: கோலி அசத்தல் சதம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர் விராட் கோலி தனது 49-ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Puducherry
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Puducherry
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Listen
Translate
Change font size

