कोशिश गोल्ड - मुक्त
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...
Dinamani Puducherry
|August 22, 2025
மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஆக. 21: 'அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறும்போது நீதிமன்றங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்குமா?' என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத்தலைவர் கடந்த மே மாதம் அனுப்பிய தெளிவுரை கோரும் கடிதத்தில் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். அக்கடிதத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு அனுமதித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்றாம் நாளாக வியாழக்கிழமையும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தா, 'ஒரு குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கத்தக்க ஒரு வழக்கில் நீதிமன்ற விசாரணை ஏழு ஆண்டுகள் கடந்து நடக்கிறது. உடனே குடியரசுத் தலைவர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த வழக்கில் தாமே தீர்ப்பளித்து குற்றவாளிக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியுமா?
அந்தந்த அரசியல்சாசன அமைப்புகளுக்குரிய அதிகாரங்கள் தெளிவாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை தங்களுக்குரிய கடமையை வரம்புக்குள்பட்டு ஆற்ற வேண்டும்' என்று வாதிட்டார்.
அவரது வாதத்துடன் உடன்படாத தலைமை நீதிபதி கவாய், நீதிபதி நரசிம்மா ஆகியோர், 'அரசியலமைப்பின் பாதுகாவலராக உச்சநீதிமன்றமே விளங்குகிறது. ஒருவேளை அரசியலமைப்பின் ஒரு அமைப்பு எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் அதற்குரிய கடமையை ஆற்ற மறுக்குமானால் அரசியலமைப்பின்படி நிறுவப்பட்ட நீதிமன்றங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு, 'இதில் நாங்கள் தலையிட முடியாது, நாங்கள் சக்தியற்றவர்கள்' என்று வேடிக்கை பார்க்க முடியுமா? என்று கேட்டனர்.
இதையடுத்து துஷார் மேத்தா, 'ஒவ்வொரு அமைப்பும் அரசியலமைப்பின் பாதுகாவலரே. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றம் தன்னிச்சையாக சட்டத்தை இயற்றும் அதிகாரத்தை கையில் எடுத்துச் செயல்பட முடியாது' என்றார்.
यह कहानी Dinamani Puducherry के August 22, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Puducherry से और कहानियाँ
Dinamani Puducherry
காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.
1 min
July 01, 2026
Dinamani Puducherry
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Puducherry
மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Puducherry
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Puducherry
ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
உயர்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.
1 min
July 01, 2026
Dinamani Puducherry
ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்
புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Puducherry
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
1 min
July 01, 2026
Dinamani Puducherry
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani Puducherry
முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா
பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Puducherry
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Translate
Change font size
