Facebook Pixel கப்பல் கவிழ்ந்தது; கேள்விகள் எழுந்தன... | Dinamani Puducherry - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

கப்பல் கவிழ்ந்தது; கேள்விகள் எழுந்தன...

Dinamani Puducherry

|

June 09, 2025

உலக வர்த்தகத்தில் சுமார் 80%-90% சரக்குப் போக்குவரத்து கடல் வழியாக நடைபெறுகிறது.

- இரா.சுந்தரபாண்டியன்

உலகம் முழுவதும் உள்ள கடல் பரப்பில் சுமார் ஒரு லட்சம் வர்த்தகக் கப்பல்கள் நாடுகளுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்கின்றன. கடல்வழி சரக்குப் போக்குவரத்தில் இரும்புத்தாது, நிலக்கரி, தானியங்களின் பங்கு 50% என்றால், கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் பங்கு 25% என்கிறது புள்ளிவிவரம்.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருள்கள், தொழில்துறை பயன்பாடுகளுக்குத் தேவையான அமிலங்கள் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் கணிசமான அளவில் கடல்வழி சரக்குப் போக்குவரத்தின் மூலமாகவே கொண்டு செல்லப்படுகின்றன. எரிசக்தி ஆதாரங்களில் கச்சா எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. நுகர்வுக் கலாசார மயமாகிவிட்ட இன்றைய சூழலில் எண்ணெய் இல்லையேல் எதுவும் இல்லை என்பதுதான் எதார்த்தம்.

ஆழ்கடலுக்கு அடியில் தேங்கிக் கிடக்கும் கச்சா எண்ணெயை குழாய் வழியே பிரித்தெடுக்கும்போது; பீப்பாய்களில் அடைத்து கப்பல்களில் ஏற்றி இறக்கும்போது; கடல்வழிப் போக்குவரத்தின்போது; நிலத்தடி குழாய் வழியாக கொண்டு செல்லப்படும்போது கசிவு, வெடிப்பு, கவனக்குறைவு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இவ்விபத்துகள் துரதிருஷ்டவசம் என்றுதான் கூற வேண்டும்.

கச்சா எண்ணெய், வேதிப்பொருள்கள் உள்ளிட்ட சரக்குகள், கப்பலுடன் கடலில் மூழ்கும்போது கடல்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைவிக்கின்றன.

Dinamani Puducherry

यह कहानी Dinamani Puducherry के June 09, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Puducherry से और कहानियाँ

Dinamani Puducherry

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Puducherry

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Puducherry

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது(படம்).

time to read

1 min

May 18, 2026

Dinamani Puducherry

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Puducherry

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Puducherry

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Puducherry

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Translate

Share

-
+

Change font size