कोशिश गोल्ड - मुक्त
எத்தனை, எத்தனை வகையான தலைவர்கள்!
Dinamani Perambalur & Ariyalur
|September 24, 2025
தொகுதி வரையறைச் சட்டத்தை உருவாக்கியவர் மோடியா? அந்தச் சட்டத்தை அம்பேத்கரும், நேருவும், படேலும், அல்லாடி கிருட்டிணசாமி ஐயரும், அரசியல் நிருணய சபையும் ஆராய்ந்து, விவாதித்து சட்டமாக்கி இருக்கிறார்கள்! இதற்கு அரசியல் நிருணய சபை காரணமா? மோடி காரணமா?
உண்மையில் மைய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. முப்பது நாட்கள் ஒரு மந்திரியோ, அவரனையரோ, தலைமையமைச்சர், முதலமைச்சர் உட்பட யாரோ சிறையில் இருக்க நேரிட்டால், அவர் சிறையிருந்த முப்பத்தியொன்றாவது நாளில் பதவியை இழந்து விடுவார்! அந்த வழக்கில் தான் குற்றமற்றவன் என்று விடுதலை பெற்ற பிறகே, அவர் பதவி அரசியலுக்குத் திரும்ப முடியும்!
நாடாளுமன்றத்தில் இது விவாதிக்கப்பட்ட போது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மாற்றுக் கட்சி ஆட்சியினரைப் பழி வாங்கவும், அவர்களை நிலைகுலையச் செய்யவுமே இத்தகைய சட்டங்கள் என்று அவர்கள் கூறினர்!
இது குறித்து எதிர்க்கட்சிகளோடு அலசி விவாதித்து, வேண்டிய திருத்தங்களைச் செய்து, அதை நடைமுறைப்படுத்த, அது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கூட்டுக் குழுவில் பங்கேற்பதற்குப் பதிலாக, அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக அந்தக் குழுவைப் புறக்கணித்துள்ளன. இதற்கு ராகுல் காந்தி தலைமை ஏற்றுள்ளார்!
இந்தச் சட்டத்தில் உள்ள முப்பது நாள் மிகக் குறைவான காலக்கெடு என்று தோன்றினாலோ, அதைவிடக் குற்ற நடத்தையாளர் தப்பிக்க முடியாத வகையில் வேறு புது வகைத் திருத்தம் தோன்றினாலோ, அவற்றை முன்வைப்பதற்கு மாறாக, இந்தச் சட்டத்தையே முற்றாக எதிர்ப்பதன் மூலம், எல்லா மாநில ஊழல் ஆட்சிகளையும் முழுமையாகக் காப்பாற்றத்தானே இண்டிக் கூட்டணி வழி வகுக்கிறது!
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் ஒன்றரை ஆண்டுகள் சிறைக்குள்ளேயே முதலமைச்சராக இருந்து பணியாற்றினார்! சிறை என்பது குற்றம் செய்தவர்களின் தண்டனைக்கான இடம். அதைத் தலைமைச் செயலகமாக மாற்றிக் கொள்ளும் நிகழ்கால நிலையில், அதற்குரிய புதிய சட்டங்கள் தேவைப்படுகின்றனதானே!
இந்தியக் குற்றவியல் சட்டத்தை உருவாக்கிய மெக்காலேயோ, அதற்குத் திருத்தங்கள் செய்த இந்திய ஆட்சியினரோ, மந்திரிகள் மந்திரிகளாகவே சிறைக்குள் புகுவர் என்று எதிர்பார்க்கவில்லை!
அதைவிட ஒரு படி மேலே போய், குற்ற அடிப்படையில் சிறைக்குப் போனவரை, ஆளும் கட்சி ஒரு மந்திரியாகவே சிறையில் நியமனம் செய்தது. ஆளுநர் மறுத்தபோது, யாரையும் மந்திரியாக்குவது முதலமைச்சரின் முன்னுரிமை என்று சட்டம் பேசுகிறார்கள். அரசியல் சாசனத்தில் தடை இருக்கிறதா என்று எதிர்க்கேள்வி எழுப்பி விமர்சகர்களின் வாயை அடைக்கிறார்கள்.
यह कहानी Dinamani Perambalur & Ariyalur के September 24, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Perambalur & Ariyalur से और कहानियाँ
Dinamani Perambalur & Ariyalur
ரொனால்டோ தலைமையில் அல் நாசர் சாம்பியன்
சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் சாம்பியன் ஆனது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல்: ஓய்வு பெற்றார் விஜய் சங்கர்
உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (35) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
பயனற்ற உயிருக்கு விடுதலை
கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. கருணை மரணத்தை அனுமதித்து அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.
2 mins
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
காலிறுதியில் அஸ்மிதா தோல்வி
மலேய்சியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார். இத்துடன் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம்
என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்
1 mins
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய மகளிர் அணி
ஜப்பானில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
ஃபெடரேஷன் கோப்பை: அனிமேஷ் தேசிய சாதனை
ஜார்கண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை ஒரே நாளில் இருமுறை முறியடிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
23 அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
1 mins
May 22, 2026
Dinamani Perambalur & Ariyalur
மின் கட்டணம் உயர்த்தப்படாது
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
May 22, 2026
Translate
Change font size

