मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

மாநிலக் கல்வியை மேம்படுத்துவோம்!

Dinamani Namakkal

|

April 15, 2025

தமிழ்நாடு அரசின், மாநிலப் பாடத்திட்ட முறை வலிமையான கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும், வெற்றிகரமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தாலும் மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் குறுகிய காலத்தில் ஏறத்தாழ 6 மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

- மு. சிபிகுமரன்

மாநிலத்தின் மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பது, பாதுகாப்பது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது என்ற தலையாய கடமையை மாநிலப் பாடத்திட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கல்விப் பாடத்திட்டத்தைப் பொருத்தவரையில் தமிழ் மொழி, இலக்கிய வரலாறு, அரசியல் மற்றும் சமூகப் பண்பாட்டு வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம் இவற்றோடு உலகமொழியாகிய ஆங்கிலம் என நிறைவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

காலந்தோறும் பல்வேறு சீர்திருத்தங்களைப் பாடத்திட்டத்தில் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு, கல்வி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் அதிகபட்சமான நிதியை ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. தமிழக அரசு பின்பற்றுகிற பாடத்திட்டம் அறிவியல் பூர்வமானதும் வரலாற்றுச் சிறப்புடையதும் ஆகும். அதன் காரணமாக, இந்திய நாட்டுக்கு தலைசிறந்த கல்வியாளர்களையும், விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும், ஆட்சிப்பணி அதிகாரிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இவர்களுள் பெரும்பாலோர் அரசுப் பள்ளிகளிலும், தமிழ் வழியிலும் கற்றவர்கள் என்பது மற்றுமொரு சிறப்பாகும். இவ்வாறு பயின்றவர்கள் இன்று தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்று வருகிறார்கள்.

கடந்த 8.08.2024 தரவுகளின்படி, தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற அரசே நடத்துகிற தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 37,592 ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 8,329 ஆகும். தனியார் பள்ளிகள் 11,443 ஆகும். இதில் அரசு நடத்தும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 3,168 ஆகும். அதே வேளையில், சிபிஎஸ்இ எனப்படுகிற மத்திய அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற பள்ளிகள் தமிழ் நாட்டில் கடந்த 2010-ஆம் ஆண்டில் 250 பள்ளிகளாகவும், 2015-ஆம் ஆண்டில் 580 பள்ளிகளாகவும், 2024 -ஆம் ஆண்டில் 1,617 பள்ளிகளாகவும் இருக்கின்றன. இவை அனைத்தும் மேல்நிலைப் பள்ளிகளே. எனவே, தமிழ்நாடு அரசு நடத்தும் மேல்நிலைப் பள்ளிகளில் சரிபாதி அளவாக வளர்ந்து நிற்கின்றன மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள். ஊரகப் பகுதிகளில் கூட மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் மீதான நாட்டம் அதிகரிப்பதைக் காண முடிகிறது.

Dinamani Namakkal से और कहानियाँ

Dinamani Namakkal

Dinamani Namakkal

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா

பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா: கோலி அசத்தல் சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர் விராட் கோலி தனது 49-ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Namakkal

தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்

விவசாயிகள் கடும் பாதிப்பு

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

Dinamani Namakkal

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Namakkal

Dinamani Namakkal

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Namakkal

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size