कोशिश गोल्ड - मुक्त
மழைக்கால விபத்துகளைத் தவிர்ப்போம்!
Dinamani Nagapattinam
|October 27, 2025
தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவ மழையால் சராசரி மழையின் அளவைவிட 27% அதிக மழைப் பொழிவு இருந்தது. இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையின் அளவு இயல்பை விட 8% அதிகம் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித் துள்ளது. இவற்றின் அடிப்படையில், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை யின் அளவும் சராசரி அளவைவிட அதிக அளவில் பெய்யக்கூடும்.
நிலத்தடி நீரை உயரச் செய்வதோடு, நீர்நிலைகளையும் நிரம்பச் செய்து உயிர் களையும், பயிர்களையும் வாழ வைக் கும் பருவமழையால், சில பாதிப்புகளும் ஏற்படவே செய்கின்றன.
பருவ மழைக் காலங்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரால் மலேரியா, டெங்கு, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படலாம்.
இடி, மின்னல் பாய்ந்து மக்கள் உயிரி ழக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடை பெறுகின்றன. அண்மையில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கழுதூரில் சோளக்காட்டில் வேலை செய்துகொண் டிருந்த 4 பெண்கள் மின்னல் பாய்ந்து உயிரிழந்தனர்.
கடந்த ஜூலை மாதம், பிகார் மாநி லம் நாளந்தா, பாட்னா, வைஷாலி, ஷேக் புரா ஆகிய நான்கு மாவட்டங்களில் மின் னல் பாய்ந்து 34 பேர் உயிரிழந்த சம்ப வம் நிகழ்ந்தது. இடி, மின்னலால் தாக்கப் பட்டு உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் கிரா மப்புறங்களில் வசிப்பவர்கள் ஆவர். இதற் குக் காரணம் இடி, மின்னலின் போது தற்காத்துக் கொள்ள போதிய விழிப்பு ணர்வு இல்லாததே இதற்குக் காரணம். இடி, மின்னல் பசுமையான உயர்ந்த மரங் களை எளிதில் தாக்கும் என்பது தெரியாத நிலையில், இடி, மின்னல் ஏற்படும் போது அருகிலிருக்கும் மரங்களின் கீழ் தஞ்சம் அடைபவர்கள் ஏராளம்.
यह कहानी Dinamani Nagapattinam के October 27, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Nagapattinam से और कहानियाँ
Dinamani Nagapattinam
தமிழக ஆட்சி அகற்றப்படுவது உறுதி
தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ
தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3இல் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஷட்டில் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீப்பிடித்ததாக ஐஜிஐ காவல் சரக துணை ஆணையர் விசித்ரா வீர் தெரிவித்தார்.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு
வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
'சாட்ஜிபிடி கோ' சந்தா சேவை: இந்திய பயனர்களுக்கு ஓராண்டுக்கு இலவசம்
'ஓபன் ஏஐ' நிறுவனம் தனது பிரத்யேக 'சாட்ஜிபிடி கோ' சந்தா சேவையை இந்திய பயனர்களுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
ஜார்க்கண்ட்: மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்த குண்டு வெடித்து சிறுமி உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநில வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்து 10 வயது பழங்குடியின சிறுமி உயிரிழந்தார்.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...
இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.
3 mins
October 29, 2025
Dinamani Nagapattinam
புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து
குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாடுடன் 'டிரா' செய்தது நாகாலாந்து
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் மோதிய ஆட்டம் செவ்வாய்க்கிழமை 'டிரா' ஆனது.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
தமிழில் மட்டுமே பேசுவோம்!
மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.
3 mins
October 28, 2025
Listen
Translate
Change font size

