कोशिश गोल्ड - मुक्त
பூமித் தாயைக் காப்போம்
Dinamani Nagapattinam
|June 26, 2025
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? - நாங்கள் சாகவோ? என்று மகாகவி பாரதி பாடினார். ஆங்கிலேயர்கள் வந்து நம் நாட்டைக் கொள்ளையடித்தது குறித்து அவர் மனம் வருந்திப் பாடினார். விடுதலை பெற்ற தேசத்தில், நம் நாட்டவர்களே மிகப் பெரிய அளவில் கொள்ளையடிப்பதை யார் பாடுவது?
மனித இனத்தை மட்டுமல்ல, உலக உயிர்களைத் தாங்கியிருப்பது பூமியாகும். பூமியிருந்தால்தானே உயிர்கள் உயிர்வாழ முடியும். பூமி உயிர்களால் நிரம்பி வழிகிறது. அந்த பூமியைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வோர் உயிருக்கும் உள்ளது. மனித உயிர்களுக்கு இந்தக் கடமை அதிகமாக உள்ளது.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்றார் திருவள்ளுவர். தன்னைத் தோண்டுகிறவர்களையும் தாங்கி நிற்கும் பூமியைப்போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும் என்று அவர் கூறுகிறார்.
பூமி என்பது வெறும் மண்ணும், மக்களும் அல்ல; மலை, கடல், காடுகள், ஆறுகள், ஏரிகள் எல்லாம் சேர்ந்தது தான். இவை எல்லாம் அழிக்கப்படுகின்றன. மலைகளிலும், காடுகளிலும் ஆண்டாண்டு காலமாக வாழும் மக்களையும், கடல்சார் மக்களாகிய மீனவர்களையும் விரட்டியடித்துவிட்டு, அந்த நிலப்பரப்பில் இருக்கும் கனிமவளங்களைக் கொள்ளையடிக்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனின் தேவையையும் நிறைவேற்ற முடியும். ஆனால், ஒரே ஒரு மனிதனின் பேராசையைக்கூட நிறைவேற்ற முடியாது என்றார் மகாத்மாகாந்தி. பேராசை கொண்ட மனிதனின் கொள்ளையால் இயற்கை வளங்கள் இல்லாமல் போகின்றன. இதற்கு அரசு அதிகாரிகள் துணை போகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றமே உறுதிசெய்துள்ளது.
பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தத்தைக் குடிப்பவர்களாக குவாரி உரிமையாளர்கள் இருக்கின்றனர் என்று குவாரி விதிமீறல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் புரவிபாளையம் கிராமத்தில் செந்தாமரை என்பவர் பட்டா நிலங்களில் 2009-ஆம் ஆண்டு முதல் குவாரிகளை நடத்திவருகிறார். அவரது குவாரியில் விதிமீறல் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழு 2021 ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் சிறிய அளவில் விதிமீறல் இருப்பதாகக் கூறப்பட்டது. விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையை ஆய்வு செய்த அதிகாரிகள் குவாரியிலிருந்து சட்ட விரோதமாக கனிமவளங்கள் எடுத்ததாகக் கூறி ரூ.32 கோடியே 29 லட்சத்து 77,792 அபராதம் விதித்து 2022ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
यह कहानी Dinamani Nagapattinam के June 26, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Nagapattinam से और कहानियाँ
Dinamani Nagapattinam
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Nagapattinam
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.
1 min
October 31, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
நடுத்தர மக்களின் வளர்ச்சி
1 min
October 31, 2025
Dinamani Nagapattinam
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
1 mins
October 31, 2025
Dinamani Nagapattinam
இரட்டைப் பெருமை!
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.
2 mins
October 31, 2025
Translate
Change font size
