कोशिश गोल्ड - मुक्त
சிறப்பு தீவிர திருத்தம் எனும் தேர்தல் பதற்றம்
Dinamani Madurai
|August 14, 2025
சிறப்பு தீவிர திருத்தம் என்பது குழப்பத்தையும், மோசமான சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படாதவரை குற்றவாளிகள் என்று பிகார் வாக்காளர்கள் கருதப்படுகிறார்கள். இது தவறான முன்னுதாரணமாக மட்டுமல்லாது சட்டத்தின் அடிப்படை விதிகளையும் மீறுகிறது.
காரில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு தீவிர திருத்தம் என்பது ஜனநாயகம், சட்டத்தின் அடிப்படையிலான உலகளாவிய வாக்குரிமை முறையை மறுகட்டமைப்பதாகவே அமைகிறது. இந்த இயந்திரத்தனமான வாக்குரிமைப் பறிப்பு, நாட்டின் அதிகார மையம் நேர்மையாக செயல்படுவதாக வேடமிட்டுள்ளதையும், அரசமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுவதையும் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் அடித்தளம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 326 ஆகும். அது சற்று தெளிவற்றதாகவும், சில கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதாகவும் அமைகிறது. தேர்தல்களில் வாக்களிக்க இந்திய குடிமகனாகவும் 18 வயதுக்கு குறையாதவராகவும் இருக்க வேண்டும். மனநிலை சரியில்லாதவர், குற்ற நடவடிக்கைகள், ஊழல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு உரிய சட்டங்களின்படி தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய உரிமை உண்டு.
இதில் 'வாக்காளராக பதிவு செய்ய உரிமை உண்டு' என்ற சொல், ஒரு தவிர்க்க முடியாத அரசமைப்பு உரிமையை உருவாக்கியுள்ளதுடன், வாக்களிக்கும் தகுதியை மறுக்கும் பொறுப்பை அரசுக்கு அளித்துள்ளது. இந்தப் பொறுப்பு உருவாக்கம் நான்கு மாறாத கொள்கைகளை உறுதிப்படுத்துகிறது. முதலாவதாக, வாக்குரிமை என்பது குடியுரிமையின் இயல்பாகவே அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட தகுதி.
இரண்டாவது வாக்களிப்பதற்கான தகுதியிழப்புகள் குறித்தானது. இதன்படி, அரசமைப்புச் சட்டத்தில் ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டால், குறிப்பிடப்படாத மற்ற விஷயங்கள் விலக்கப்பட வேண்டியவை என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மூன்றாவதாக ஒவ்வொரு தகுதியிழப்புக்கும் நீதித் துறை ஒப்புதல் தேவைப்படுகிறது. நீதிமன்ற அறிவிப்புகளின்படி மனநிலை சரியில்லாதவர், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சட்டப்பேரவையால் தகுதி நீக்கப்பட்டவர் அல்லது அரசின் பிற நிர்வாக அமைப்புகளால் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கவில்லை என்று அறிவிக்கப்படுவது. இவை தவிர, பிற வேறு எந்த அமைப்புகளும், விதிகளும் யாருடைய வாக்குரிமையையும் தகுதிநீக்கம் செய்ய முடியாது.
यह कहानी Dinamani Madurai के August 14, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Madurai से और कहानियाँ
Dinamani Madurai
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Madurai
புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்
அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு
1 min
July 01, 2026
Dinamani Madurai
சம்பத் ராயிடம் போலீஸ் விசாரணை; வாக்குமூலம் பதிவு
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு
1 min
July 01, 2026
Dinamani Madurai
தலைமை நீதிபதிக்கு 'இண்டி' கூட்டணி கடிதம்: திமுக, ஆம் ஆத்மி கையொப்பம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு 'இண்டி' கூட்டணியின் 21 கட்சிகள் உள்பட 23 அரசியல் கட்சித் தலைவர்கள், ஒரு சுயேச்சை எம்.பி. ஆகியோர் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
1 min
July 01, 2026
Dinamani Madurai
மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Madurai
கடையம் சத்திரம் பாரதி உயர்நிலைப் பள்ளி 'செல்லம்மாள் பாரதி' பள்ளியாக பெயர் மாற்றம்
தென்காசி மாவட்டம், கடையம் சத்திரம் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளியின் பெயரை கடையம் சத்திரம் செல்லம்மாள் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளி என்று மாற்றி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
1 min
July 01, 2026
Dinamani Madurai
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Madurai
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
1 min
July 01, 2026
Dinamani Madurai
ராஜ்நாத் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர்கள் வீரமரணம் விவகாரம்
1 mins
July 01, 2026
Dinamani Madurai
ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்
புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
July 01, 2026
Translate
Change font size
