Facebook Pixel சுற்றுச்சூழல் சிதைந்தால் சுற்றுலா இல்லை! | Dinamani Karur - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

சுற்றுச்சூழல் சிதைந்தால் சுற்றுலா இல்லை!

Dinamani Karur

|

June 12, 2025

சுற்றுலாப் பயணிகளைப் பொருத்தவரை பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை. தீவிர கண்காணிப்பும் கடும் அபராதமும் மட்டுமே சுற்றுலாப் பயணிகளைப் பொறுப்புடன் செயல்பட வைக்கும். ஆனால், சுற்றுலாவால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதங்கள் அனைத்தையும் தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரிப்பது என்பது முடியாத காரியம்.

- முனைவர் இரா.கற்பகம்

மத்திய-மாநில அரசுகள் எல்லாமே சுற்றுலாவை மேம்படுத்த அதிக முயற்சிகள் எடுத்து வருகின்றன. பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி ஒரு கடமையாக, அருகாமை-தொலைவு என்றெல்லாம் பார்க்காமல், கூட்டம் கூட்டமாக சுற்றுலாத் தலங்களை மக்கள் முற்றுகையிடுகிறார்கள்.

மலைப்பிரதேச சுற்றுலா, கோடைக்கால சுற்றுலா, குளிர்கால சுற்றுலா, மழைக்கால சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, கல்வி சுற்றுலா, கலாசார சுற்றுலா, சூழல் சுற்றுலா, கானுயிர் சுற்றுலா-என சுற்றுலா ஒரு பெரும் வணிகமாக மாறிவிட்டது.

இச்சுற்றுலா வணிகத்தினால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால், அரசுகளோ, அதிகாரிகளோ, பொதுமக்களோ இதைப் பற்றிச் சற்றும் கவலைகொள்ளவில்லை என்பது மிகப் பெரிய சோகம்! ஒரு பக்கம் 'காலநிலை மாற்றம்', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்றெல்லாம் பல்வேறு நாடுகள் கூட்டம் போட்டு, கருத்தரங்குகள் நடத்தி, விவாதம் செய்கின்றன.

மறுபக்கம் 'சுற்றுலா' என்ற பெயரில் எல்லா நாடுகளுமே சுற்றுச்சூழலைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளில் மக்கள்தொகை குறைவு; சீனா, ஜப்பான் போன்ற அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள்; சுற்றுலாவுக் கான கட்டணம் மிக அதிகம்; மேலும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்தந்த நாட்டுச் சட்டங்களை மதித்து நடக்கும் பொறுப்பான சுற்றுலாப் பயணிகள். இதனால் எல்லாம் அங்கு சுற்றுலாப் பயணிகளால் சுற்றுச்சூழலுக்கு எவ்விதக் கேடும் ஏற்படுவதில்லை.

நம் நாட்டுக்கு வருவோம். சுற்றுலாத் தலங்கள் எங்கிலும் கூட்டம்; சப்தம்; குப்பை; நெகிழிப் புட்டிகள், பைகள்; ஒழுங்கின்மை..... மேலை நாட்டவரிடமிருந்து மதுவையும், ஆடைக் குறைப்பையும் கற்றுக்கொண்ட நாம், அவர்களிடமிருந்து பொறுப்புணர்வைக் கற்றுக்கொள்ளவில்லையே! 'ஒரே ஒரு நபராக இருந்தாலும் ஆங்கிலேயர் வரிசையில்தான் நிற்பார்' என்று ஆங்கிலேயரின் ஒழுங்கைப் பற்றிச் சொல்வதுண்டு.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிர்ந்து பேச மாட்டார்கள்; பயணச் சீட்டாகட்டும், உணவாகட்டும், வரிசையில் பொறுமையாக நின்று பெறுவார்கள். நம் மக்களைப் போல் முண்டியடித்துச் சண்டையிட்டு அசிங்கப்படுத்த மாட்டார்கள். எப்போது மக்களிடம் பொறுப்புணர்வும் நாகரிகமும் இல்லையோ, அதை மக்களிடம் கண்டிப்புடன் கொண்டு வருவது அரசுகளின் கடமை.

Dinamani Karur

यह कहानी Dinamani Karur के June 12, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Karur से और कहानियाँ

Dinamani Karur

ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Karur

மாற்றம் தந்த மதிப்பீடு !

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.

time to read

2 mins

May 16, 2026

Dinamani Karur

வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Karur

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Karur

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Karur

சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது

வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Karur

Dinamani Karur

ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு

அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு

time to read

2 mins

May 16, 2026

Dinamani Karur

சநாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமர்சனம்

சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Karur

ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Karur

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Translate

Share

-
+

Change font size